Tags
கௌதம் – ஹாரிஸ் -தாமரை கூட்டணி திரும்பவும் வந்திருக்கிறார்கள் வாரணம் ஆயிரத்தோடு .ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியானால் என்ன , போங்கடா என்று சொல்லி விட்டு இன்னும் ஆறு பாடல்கள் . இப்போதைய ஹாட் .
கௌதமின் படங்கள் , தலைப்பிலிருந்து , பாடல்கள் , காட்சிப் படுத்துதல் என எல்லாமே ஒரு தேர்ந்த கவிதையின் கட்டமைப்பில் இருக்கும் . வாரணம் ஆயிரம் என்ற பெயரே சாட்சி . நிச்சயம் படத்தில் ஒரு பாடலாவது பலமுறை கேட்கவைக்கும் . கண்மூடி தூங்க முயலும் போது தலைக்குள் தொடர்ந்து ஓடி ,கனவைக் கெடுக்கும் (ஹேங் ஓவர் ???!!) . அதற்கு ஒரே தீர்வு , ஊருக்கே தெரிந்த வைத்தியம் எழுந்து மீண்டும் ஒருமுறை பாடலைக் கேட்பது தான் .
வெண்மதி வெண்மதி – மின்னலே
ஒன்ற இரண்டா – காக்க காக்க
பார்த்த முதல் நாளே – வேட்டையாடு விளையாடு (இந்தப் பாடல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது .. இருந்தாலும் இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பது தனி கதை.. அது இன்னொரு சமயம் )
காதல் கொஞ்சம் – பச்சை கிளி முத்துச் சரம்
சத்யம் ஊத்திக்கொண்ட பாடல்களால் (நெஜமாகவே நீங்க தானா ஹாரிஸ் ) ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலே பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் . கேட்ட முதல் பாடல் அஞ்சலை கானா பாட்டு . கடுப்பாகிவிட்டது . போச்சுடா இதுவும் ஊத்தலா என சலிப்புடன் தான் மற்ற பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன் .
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை —
சரி அப்பறம்
நீருக்குள் மூழ்கிடும் தாமரை —
யாருகிட்ட ஓட்டறீங்க .. தாமரை எப்டியா தண்ணிக்குள்ள மூழ்கும் .. ரைமிங் கு என்ன வேணும் னா எழுதுவீங்களா
சட்டென்று மாறுது வானிலை
அடுத்த வரி தான் எழுந்து உட்கார வைத்தது .
பெண்ணே உன் மேல் பிழை .
அழகான ஒரு குறுங்கவிதை . பாடல் முழுக்க . திருவள்ளுவராவது காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ன்னு தான் சொன்னாரு . தாமரை கொஞ்சம் மேல போய் தாமரை (பார்ரா மறுபடியும் தாமரை !!) நீருக்குள்ளே மூழ்கிடுச்சுன்னு சொல்றாங்க . அது என்டோட பிழை இல்ல .. உன்னோடது பெண்ணே ..
அஞ்சலை , ஏத்தி ஏத்தி எல்லாத்தையும் தூக்கி போட்டு நெஞ்சுக்குள் பெய்திடும் , நீயின்றி நான் இல்லை , அனல் மேல பனி துளி , எல்லாமே அழகான குட்டி குட்டி கவிதைகளோட தொகுப்பு . கண்டிப்பா கவிதைக்காக ஹாரிஸ் நெறைய காம்ப்ரமைஸ் பண்ணிருக்காரு .(கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகமில்லா ) .
அருமையான குரலில் , தெளிவான உச்சரிப்புடன் ஹரிஹரன் .. உடன் தேவன் .. அழகான கவிதை வரிகள் .. அதை சிதைக்காத மெல்லிய ஆனால் உயிர் தொடும் இசை , ஹம்மிங் . கோரஸ் என எல்லாமே ஒரு perfect team .
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் (உண்மையில் எல்லாமே )
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்
எவ்வளவு ரசனையான வரிகள் . அந்த வீடு எப்டி இருக்கும் ன்னு பார்க்க காத்து தான் இருக்கேன் . கௌதமும் அவரோட பங்கை சரியா செஞ்சிருந்தார்னா பாடல் அதிகமுறை எல்லா தொலைக்காட்சிகளிலும் ஓடும் .
அடுத்த வரிகள்
காதல் என்னைக் கேட்க வில்லை
கேட்டால் அது காதல் இல்லை
விளக்கம் எதுவும் வேணுமா என்ன ?? 😉
ரெண்டு நாளா ஒரே பாட்ட ஓட விட்டு ஏன்டா கொல்ற என்ற அறை நண்பர்களின் குமுறல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு (ரசனை இல்லாத பாய்ஸ்) காதில் head phones மாட்டிக் கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேன் .நேற்று மதியம் ஆரம்பித்தது . எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை . ஒவ்வொரு முறையும் எதாவரு ஒரு வரியில் , ஏதாவது ஒரு ஒலியில் நின்று விட்டிருந்தேன் . பாடல் மட்டும் என்னைக் கடந்து போயிருந்தது . அது ஒரு விதமான விளக்க முடியாத உணர்வு .
உங்களுக்கு மிகவும் பிடித்தமான பெண்ணுடன் , மாலை மங்கிய நேரத்தில் நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் , நீங்களே எதிர் பாராமல் உங்கள் கைகளை எடுத்து அவள் கோர்த்துக் கொண்டால் ,
இல்லை மாடியில் காயும் உடைகளை எடுக்கச் செல்கையில் மழை வந்து ஒரு நொடியில் நனைந்து போனால் ,
இல்லை தெருவில் விளையாடும் குழந்தைகள் , வழியில் செல்லும் உங்களை , அங்கிள் விளையாட வர்றீங்களா எனக்கேட்டால் ..
இந்த உணர்வுகளை எல்லாம் விவாரிக்க முடியாதல்லவா ? ஒன்றுக் கொன்று ஒப்புமை தானே சொல்ல முடியும் .
பாடலை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே வருகையிலும் பாடல் மட்டும் கூடவே வந்துகொண்டிருந்து . எப்பொழுதும் பார்க்கும் அதே நிலா , எப்பொழுதும் தொடும் அதே காற்று (உன்னைத் தாண்டி போகும் போது வீசும் காற்றின் வீச்சு வேறு ).. ஆனால் நேற்று புது அனுபவமாக இருந்தது.
வீட்டின் முன்னிருந்த பிள்ளையார் கூட அழகாய் தெரிந்தார் . அவர் செம்பருத்தியை எடுத்து அவருக்கே கொடுத்தேன் . எல்லாவற்றையும் தாண்டி கவிதைகளில் தாமரை நிற்கிறார் . அந்தாதி போல அங்கங்கே ஒரு வரியையே உள்ளுக்குள் வைத்திருக்கும் வார்த்தைகள் . நாமெழுதியிருக்க வேண்டுமே என பொறாமைப்பட வைத்தது .
கேட்டுப் பாருங்கள்.
இந்த வாரக் குட்டு (சும்மா லுலுவாய்க்கு)
பதிவர் bee’morgan க்கு .. ஹரிஹரன் குரல் கேட்டுக் கொண்டிருந்த போது , ஏகன் பாடல் கேட்டியா என உசுப்பேத்தி விட்டு , அதை கேட்க வைத்துக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 🙂
🙂 me waiting to watch d movie 🙂
LikeLike
நான் இப்பாடலுக்கு அடிமையானதுபோல ஆகிவிட்டேன். என்னால் உங்கள மாதிரி கோர்த்து கவிதமாதிரி எழுத தெரியல. அதனால இதுக்கு சூப்பருனு படம் மட்டும் போட்டு ஒரு பதிவு போட்டுட்டேன். ஹிஹி
LikeLike
வாங்க சுபாஷ் 🙂
உங்க தொழில் நுட்பத் தளம் (+ மொக்கை ஹி ஹி ) அருமை .
வருகைக்கு நன்றி
LikeLike
உள்ளேன் ஐயா. சொல்றதுக்கு எதுவும் மிச்சம் இல்ல. பாட்டு நல்லாருக்கு ங்கறத தவிர.. 🙂
ஏன்டா, டேய்.. நானா உன்ன ஏகன் பாட்டு கேக்கச் சொன்னேன்.? கேட்டியானு கேட்டதுக்காக நீ போய் கேட்டா, உன் மேல் பிழை.. 🙂
—
ரகசியம் பாடலும் நல்லா இருக்கு.. அந்த பெண் குரல், பிடிச்சுருக்கா பிடிக்கலையான்னு சொல்லத்தெரியல.. ஆனா, பிடிக்கற மாதிரி இருக்கு.. 😉
LikeLike
ஏன்டா பேச மாட்ட ??
ரகசியம் ??? அது தான் படத்துல இல்லையே ..
LikeLike
what is the meaming of the words in the song
“kanchanai”
“karihai”
btw i heard it “punnagaiyo boganvilla” is it bogamilla or boganvilla?
LikeLike
காரிகை என்பது பெண் எனப் பொருள்படும் இன்னொரு சொல் .
காஞ்சனம் என்றால் பொன் . காஞ்சனை பொன் போன்றவள் , பிரகாசமானவள் எனப் பொருள் தரும் .
எனக்கு தெரிந்த விளக்கத்தையே இங்கு தந்துள்ளேன் . தவறெனத் தோன்றினால் திருத்தலாம் .
புன்னகையோ போகம் இல்லா என்று தான் ஹரிஹரன் குரலில் படுகிறது .
வருகைக்கு நன்றி செழியன் 🙂
LikeLike
how are you guys writing this in tamil fonts. please teach me. i would like to write in tamil but i don’t know how to… should we know tamil typing or should i download a software for it. pls help me
in sanskrit “kanch” could mean shell, sangu, does this mean something like sangu pondra kazhuttahi udayaval?
LikeLike
Hi Chezhiyan ,
In sanskrit kanchan means gold .And in the song the word is kanchanai only . So i’m not sure that it means wat u said or not .. may be .
LikeLike
இனி தமிழில் தட்டச்சு செய்ய ..
இங்கே சொல்லியிருப்பது நான் பயன்படுத்தும் முறை பற்றி
இதை விட எளிதான முறை இருக்கக் கூடும் .
http://www.google.com/transliterate/indic/tamil
இது தட்டச்சு செயலிக்கான முகவரி .
just type in english and you ll get it in tamil .
for example ,
for typing நான் , type ‘naan’ and hit space , you ll get the word.
just try it . It’s simple.
LikeLike
அன்பரே மிக்க நன்றி. இப்பொழுது நான் தமிழில் நன்றாக எழுத முடிகிறது
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டேன். அவரும் காஞ்சனை என்றால் தங்கம் என்று பொருள் படும் என்றுதான் சொல்கிறார்
செழியன்
LikeLike
my pleasure 🙂
LikeLike
அருமையா எழுதியிருக்கீங்க!. இங்க (தாமரையின் விளங்கா வரிகள் http://vurathasindanai.blogspot.com/2008/12/blog-post.html) வந்து கொஞ்சம் விளக்கம் குடுங்களேன்?
LikeLike
/*காதல் என்னைக் கேட்க வில்லை
கேட்டால் அது காதல் இல்லை */
இதே பொருளையொட்டி வைரமுத்து,
‘தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை ‘
என்று எழுதியிருக்கிறார். 🙂
LikeLike
முதல் வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி சாணக்கியன் 🙂
முடிந்த அளவு முயற்சி பண்றேன் .
LikeLike
வைரமுத்துவின் கவிதைகள் புதுக் கவிதை எழுதுபவர்களுக்கு அகராதி போன்றது . இப்பொழுது கவிதை எழுதுபவர்கள் அல்லது எழுத முயல்பவர்கள் யாரும் அந்தத் தாக்கம் இல்லாமல் எழுதுதல் கடினம் என்றே நினைக்கிறேன் .
பாவங்க தாமரை , இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டிடலாம் . 😉
எப்படிப் பார்த்தாலும் காதல் ஒன்று தானே .அதனால காதல் கவிதைகள் எல்லாமுமே ஒன்று தான் .
LikeLike
“புன்னகையோ போகன்வில்லா” என்று தான் வருகிறது, முழு பாடலின் வரியையும் பார்க்க http://kavingerthamarai.blogspot.com/2009/02/blog-post.html
LikeLike