தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
நாடு நகரங்கள் தாண்டி
காடுகள் புகுந்து மீண்டு
சில மலைகளைத் துளையிட்டு
வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை
நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன
வழியனுப்பிகளின் முகங்களையும்
கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்
நாம் ஏறிய ரயில் நிலையங்களின்
நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
தண்டவாளங்களின் மேலும்
நாம் இறங்கிய பின்னர்
நம்முள்ளும் ….
தீபாவளிக்கு ஊருக்குப் போக ட்ரெயினில டிக்கெட் கிடைச்சுடுச்சுனு சொல்லிக்காட்டுறத்துக்கா..? 🙂
LikeLike
🙂
வழியனுப்ப யாருமில்லன்னு சொல்றதுக்கும் கூட
LikeLike
நன்றாக இருக்கிறது.
‘நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன”
பொதுவாக இதை சுமந்துகொண்டு போவது
மாதிரி எழுதுவார்கள். நிங்கள் உல்டா.நம்ம
ஊர் ரயில் படம் போட்டிருக்கலாம்.கவிதை
மனதில் ஒட்ட. raviaditya.blogspot.com வாருங்கள்.”spam mail kavithaikal” படிக்கலாம்.
LikeLike
வாங்க ரவி ..:-) என்ன விஷயம்ன்னா என் company ல blogspot உம் பார்க்க முடியாது .. imagum தேட முடியாது . எல்லாம் bolcked . அதான் கெடைச்ச படத்த போட்டுட்டேன் .
கண்டிப்பா வீட்டுக்கு போனதும் உங்க தளத்த பாக்கணும் . அழைப்பிற்கு நன்றி 🙂
LikeLike