Tags

, ,

அன்பு நண்பர்களுக்கு..,

வணக்கம். இம்மண்ணின் கலைகள் மீதும் , கலைஞர்களின் மீதும் கொண்ட நிஜமான அக்கறையோடும் , கடந்த வருடம் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதும் , பிற உதவிகள் செய்தும் , விழா எடுத்ததும், உங்களுக்குக் நினைவிருக்கும்.குளுகுளு அறைக்குள் அமர்ந்துகொண்டு பல்லாண்டு கால திட்டமாக எழுத்து வடிவிலேயே வைத்திருக்காமல் கலைஞர்களின் இடத்திற்கே தேடி சென்று இயன்றவரை உதவி செய்வதற்கான சிறு முயற்சிகள்தான் இவை.

இந்த முயற்சிகளும் ,நிகழ்ச்சிகளும் தொய்வின்றி ஒவ்வொரு வருடமும் தொடரவேண்டும் என்பதுதான் உங்களைப்போலவே எங்களின் விருப்பமும். வருகிற ஜனவரி 24ஆம் தேதி கடந்த வருடம் போலவே இந்த முறையும் சேலம் மாவட்டத்தில் ஏர்வாடியில் கூத்து கலைஞ்ர்களுக்கு பாராடு விழா நடத்த ஏர்பாடு செய்யப்பட்டிருப்பதோடு..”மணல் வீடு”இதழ் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப்போட்டியின் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அத்தோடு தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளான சா.தமிழ்செல்வன், பேரா.மு.இராமசாமி, சிவகாமி.ஐ.ஏ.எஸ் , பாமரன் ,நாஞ்சில்நாடன், ஆதவன்தீட்சண்யா இவர்களோடு சேர்த்து இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

மக்கள் கலைகள் யாவும் மக்களாலேயே வளர்க்கப்படுவதற்கான ஒரு சூழல் ஏற்படுவதுதான் ஆரோக்கியமான் விஷயம். கூத்தினை மட்டுமே வாழ்வாக நினைத்து தங்களை அர்ப்பணித்திருக்கும் இக்கலைஞர்களை கௌரவிக்கும் வாய்ப்பாக உங்கள் பங்களிப்பை செய்ய விரும்பினால். நீங்கள் அனுப்பும் தொகையினை..”வி.சண்முகபிரியன்..a/c no:611901517766 என்ற ICICI வங்கி கணக்கிற்கு சேலம் செவ்வாபேட் கிளையில் மாற்றுவதற்கு ஏற்றவாறு அனுப்பவும்.

மிகுந்த அன்புடன்

மு.ஹரிகிருஷ்ணன்

லக்ஷ்மிசரவணகுமார்

மற்றும்..

மணல்வீடு இதழ் குழு.,

களரி தெருகூத்து பயிற்சி பட்டறை

டிஸ்கி

மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் ,

மு.ஹரிகிருஷ்ணன் – 9894605371,04298264018

லக்ஷ்மிசரவணகுமார் – 9790577460

தொடர்பு கொள்ளுங்கள் .

மேலும் எனது தளத்திற்கு வருகை தருபவர்கள் மிகக் குறைவு . முடிந்த அளவு இந்த விழா பற்றிய விபரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் கூட கலைக்காக வாழ்வையே அர்பணித்திருக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் இவ்விழாவிற்கு நாம் செய்யும் அணில் முயற்சிதான் . நன்றி.