Tags
வேலை முடிந்த நாளொன்றின்
களைத்துப் போன
புறநகர் ரயில் பயணமொன்றில்
விழிப்பிற்கும் உறக்கத்திற்கும்
இடையேயான கனவொன்றிலிருந்து
பலவந்தமாய் மீள வேண்டியிருந்தது
தொங்குங் கம்பியைத்
தொலைத்து விடாமலிருக்க ..
தூக்கம் துரத்த
ஏதாவது யோசித்திருக்க
சிக்கினார்
அன்றும் கடவுள் கைகளிலே ..
எத்தனை வேலைக ளவருக்கு
சொந்தத் தொழிலா
சம்பளமுண்டா
உயரதிகாரிக்கு பயப்படுவாரா
தான் வருமுன்னே
வந்துவிடக் கூடாதவரென
வேண்டியதுண்டா
விடுப்புக்கு விண்ணப்பிப்பாரா
பயணத்திற்கு மூன்று மாதம் முன்பே
பதிந்து வைப்பாரா
ஊதிய உயர்விற்கு
சண்டை போடுவாரா
பதில் தெரியாத
தொடர் கேள்விகளின் முடிவில்
அவர் ஒருவர் தானா
இல்லையெனில் எங்கிருக்கிறது
கடவுள்களின் அலுவலகம்
புதிய கேள்விகள்
நிறுத்தத்தில் நின்றன .
ஒரு நாளின்
எட்டு மணி நேரம் மட்டுமே
நான் செய்யும்
கூட்டல் கழித்தலிற்கே
சுளுக்கிக் கொள்ள
பல நூறாண்டுகள் தாண்டியும்
படைத்துச் சலிக்க
ஒருவரல்ல கடவுள்
பெயர்களெழுத
பயணச் சீட்டின்
பின்பக்கமாவது தாண்டும்
எனக்குத் தெரிந்த
கடவுளர்களின் பெயர் பற்றி
யோசித்துக் கொண்டே
நிலையம் தாண்டும்
மந்தையினூடே ஊர்கையில்
சாலையோரம் படுத்த படி
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்
பெயர் சொல்ல விரும்பாத
ஒரு கடவுள் .
🙂 நன்று..
LikeLike
🙂
LikeLike
its good
LikeLike
மிக நன்று
LikeLike
நன்றி சத்யா 🙂
LikeLike
ஆதிரை ,
தாங்கள் யாரெனத் தெரியவில்லை .. தெரிவிப்பதிலும் தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது .எனது படைப்புகளுக்கு தங்கள் அறுவடையில் இணைப்பு தந்து , தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙂
LikeLike
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!
LikeLike
நன்றி ரவி 🙂
LikeLike
கடவுளும் கவிதையும் நன்று
LikeLike
நன்றி முத்து 🙂
LikeLike
பல நூறாண்டுகள் தாண்டியும்
படைத்துச் சலிக்க
ஒருவரல்ல கடவுள்
பெயர்களெழுத
பயணச் சீட்டின்
பின்பக்கமாவது தாண்டும்
These lines u mean there are many gods and you start to list them in ur train ticket
and one more thing u mean the begger as a person or the gods photo in the last line….
LikeLike
//hese lines u mean there are many gods and you start to list them in ur train ticket //
நேரடியாக எடுத்துக் கொள்வதானால் இது தான் பொருள் . இந்த கவிதைக்கான கரு உருவானது பற்றி சொன்னால் , இன்னும் தெளிவாக விளங்கும் என நினைக்கிறேன் .
ஒரு ரயில் நிலையத்தின் அருகில் , சாலையோரம் ஒரு கடவுளின் படம் வரையப்பட்டு மேலே சில நாணயங்கள் சிதறியிருந்தன .. அருகில் வரைந்தவர் யாரும் இல்லை .. தனியே அவரே படுத்துக் கொண்டு பிச்சை கேட்பது போல் இருந்தது .
அந்த தாக்கம் தான் இந்தக் கவிதைக்கான மூலம் .
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அப்பாஸ் 🙂
LikeLike
நன்று! கடைசி வரிகளை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
– இன்னுமொரு கடவுள்
LikeLike
வரவேண்டும் கடவுளே 🙂 அங்கே எல்லாரும் சுகமா ??
LikeLike
This one is my favorite in the ones I have read so far in your blog
LikeLike
Thanks na 🙂
LikeLike