Tags

, ,

 

 

உதடுகள் சில்லிட்டுப்போகும்

ஒரு முன்பனிக் காலத்தில்

உன் படுக்கையிலிருந்து

கனவு கலையாமல்

தூங்கும் தேவதையாய்

தூக்கிச் செல்வேன்

சிறகுகள் தந்து ..

 

———————————————- 

 

இதென்ன குறிப்புகள்

அவள் கண்ணாடி

கவிதை எழுதத் தொடங்கினால்

விஞ்சிவிடும் என்னை …

 

———————————————-

 

கண்டேன் காதலை

அவளைச் சந்தித்ததும்

வால் முளைத்து

நான் பார்க்கும் போதே

குதித்தோடிப்போனது

என் இதயம் …

 

——————————————–

 

 

 

 

முகத்தில் ஈரக்காற்று

மோதும் போதெல்லாம்

எங்கோ தூரத்தில்

அவள் உதடுகள் குவிக்கும்

ஞாபகம்…

 

———————————————–

 

எப்பொழுதும்

அவள் கண்கள் தழுவியிருக்கும்

இமைகளை விட மென்மையானவன்

அதன் கணம் தாங்கா

நான் …

 

——————————————————–

 

 

 

 

எதையாவது மறந்துபோய்

தொலைத்துவிட்டுப் போ

நான் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க …

 

————————————————————

 

பூவிதழ்கள் பிடித்துப்

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்

உன் கைவிரல்கள்

பிடித்து நடக்க ..

————————————————————–

 

உன் ஒவ்வொரு அசைவிலும்

காற்றில் எழுதப் படுகின்றன

புதிய இசைக் குறிப்புகள்

———————————————————–

 

 

– தொடரும் …