Tags

,

 

 

தவறுதலாகக் கொட்டிவிட்ட 

தீக்குச்சிகளை

மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்

பசைவாசம் ஆறாத குச்சிகளில் 

ஆங்காங்கே தோன்றி

இடறிவிடுகின்றன

பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன 

பாலகனின் விரல் ரேகைகள் .