Tags
பிறக்கும் போதே
ஒட்டவைக்கப்பட்டிருந்தன
உன் உதட்டில் என் புன்னகைகளும்
என் கண்களில் உன் கண்ணீரும் …
—————————————————
என்னிரவில் நட்சத்திரங்களாய்
உன் நினைவுகள்
நிலவுக்காகத்தான் காத்திருக்கிறேன்
இத்தனை நாட்களாய்…
————————————————
உன்னால் நான் தொலைத்த
உச்சகட்ட ஒன்று
நான் தான்..
—————————————————
ஒவ்வொரு நாளும் கண்விழிக்கையில்
கலைந்து போன கனவின் மீதமாய்
பூக்கிறதோர் புன்னகை
என் உதட்டில் முட்களோடு
———————————————————-
காதலில் என்றுமே கண்ணீர் கிடையாது
கண்கள் தாண்டி வழியும்
எல்லாத் துளிகளும்
கீழே விழுகின்றன கவிதைகளாகவே..
————————————————————
எல்லாப் பேருந்துகளிலும்
என் வீட்டு முகவரியே
எழுதப் பட்டிருக்கிறது
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
நிழற்குடையின் கீழேயே…
————————————————————
🙂
LikeLike
//எல்லாப் பேருந்துகளிலும்
என் வீட்டு முகவரியே
எழுதப் பட்டிருக்கிறது
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
நிழற்குடையின் கீழேயே…//
அவங்களுக்கு உங்க வீட்டு முகவரிய குடுத்துட்டு
நிழற்குடை கீழ எதுக்கு காத்திருக்கணும்
வீட்டுலையே காத்திருக்கலாமே :))
LikeLike
//பிறக்கும் போதே
ஒட்டவைக்கப்பட்டிருந்தன
உன் உதட்டில் என் புன்னகைகளும்
என் கண்களில் உன் கண்ணீரும் …//
அவங்க இதயத்துல உங்க இதயத்த
ஒட்டி இருக்கலாம்
கண்ணீர தவிர்திருக்கலாம்
LikeLike
உன்னால் நான் தொலைத்த
உச்சகட்ட ஒன்று
நான் தான்…
நீங்க உங்களை தொலைத்து
பல கவிதைகள் பிறந்தது
எங்களுக்கு நன்றுதானே
LikeLike
வருக அப்பாஸ் 🙂 தங்களது கருத்துக்கு மிக்க நன்றி ..
// அவங்களுக்கு உங்க வீட்டு முகவரிய குடுத்துட்டு
நிழற்குடை கீழ எதுக்கு காத்திருக்கணும்
வீட்டுலையே காத்திருக்கலாமே :)) //
முகவரியா ? அப்போ நீங்க கண்டிப்பா முகவரி தொலைத்த கடிதங்கள் படிக்கணும் 😉
// நீங்க உங்களை தொலைத்து
பல கவிதைகள் பிறந்தது
எங்களுக்கு நன்றுதானே //
அதையே தான் எனக்கும் சொல்லிட்டு இருக்கேன் 😉
// அவங்க இதயத்துல உங்க இதயத்த
ஒட்டி இருக்கலாம்
கண்ணீர தவிர்திருக்கலாம் //
உலகம் என்ன இதயமில்லாதவன்னு சொல்லாதா ??!!:-)
LikeLike
அப்பாஸ் , உங்களோட Test comment அ எடுத்திட்டேன் …
LikeLike
நல்லா சிரி பாலா 😉
LikeLike
🙂
LikeLike
U Too சேரல் ?? 😉
LikeLike
:);)
LikeLike
காதலியை விட காதலை நேசிப்பவர்களுக்கான வரிகள் இவை.
“காதலில் என்றுமே கண்ணீர் கிடையாது
கண்கள் தாண்டி வழியும்
எல்லாத் துளிகளும்
கீழே விழுகின்றன கவிதைகளாகவே..”
காதல் ஒரு இன்ப வலி தான்.முட்களோடு புன்னகை.அழகான வரிகள்.
LikeLike
🙂
LikeLike