Tags
காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
——————————————————-
எதுவும் தெரியாது
உன்னைப் பற்றி
எல்லாம் காதல் கற்றுத்தரும்
என்ற நம்பிக்கையில் …
———————————————————
வசீகரமாய் பார்த்துப்
புன்னகை செய்கையில்
பறிக்கச் சொல்லிக் கேட்கும்
நந்தவனப் பூக்களுக்கு
நடுவே நான்…
—————————————————-
உன்னைப் பார்த்த பின் தான்
அதிகம் பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்
என்னை
——————————————————–
நிறைய கனவு காண்
எனக்கும் வேலை வேண்டும் அல்லவா???
————————————————————
மழை பெய்யும் போதெல்லாம்
உன் ஞாபகம்
மழை இல்லா நாட்களில்
மழை பெய்யும் ஞாபகம்
————————————————————
//மழை பெய்யும் போதெல்லாம்
உன் ஞாபகம்
மழை இல்லா நாட்களில்
மழை பெய்யும் ஞாபகம்//
A=B B=C, A=C கவிதைல கணிதம்..
————————————
//வசீகரமாய் பார்த்துப்
புன்னகை செய்கையில்
பறிக்கச் சொல்லிக் கேட்கும்
நந்தவனப் பூக்களுக்கு
நடுவே நான்…//
பறித்த பின்…எதற்கு நடுவே..
நினைத்தாலே வலிக்கிறது
————————-
காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
அது அடிக்க கை ஓங்கவில்லை
என்னை விட்டுவிடு என்று மன்றாட
ஓங்கின கைகள்
இப்படியே தவறாய் புரிந்து
கவிதையும் காதலும் …திருந்துங்கள் 🙂
—————————–
நிறைய கனவு காண்
எனக்கும் வேலை வேண்டும் அல்லவா???
அப்போ வெட்டி வேலைனு சொல்லுங்க..
————
உன்னைப் பார்த்த பின் தான்
அதிகம் பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்
என்னை
அதற்கு பின் மீண்டும் என்னை பார்க்கிறாய்
வெட்க்கமில்லை இது அவள்
—————–
LikeLike
அப்பாஸ் அவர்களே , நீங்க கலாய்கறீங்களா இல்லை comment தான் குடுக்கறீங்களான்னே தெரியல எனக்கு 😉
LikeLike
எதிர் பாட்டு அது பாட்டுக்கு இப்புடி வந்துருச்சு
இத எதிர் பாக்கல
எப்புடியும் எல்லாரும் பாராட்டுவாங்க
கவிதைக்கு கண்ணு பட்டுட கூடாதில்ல
LikeLike
மழை பெய்யும் போதெல்லாம்
உன் ஞாபகம்
மழை இல்லா நாட்களில்
மழை பெய்யும் ஞாபகம்
மனதில் மழை பொழிகிறது தோழர் உங்கள் வரிகளை படிக்கும்போது
LikeLike
எனக்குள் பெய்து கொண்டிருக்கிற மழையின் சிதறல்களே இந்தக் கவிதைகள் 🙂
நன்றி தோழரே !
LikeLike
“நிறைய கனவு காண்
எனக்கும் வேலை வேண்டும் அல்லவா???”—உன் கனவில் செய்யும் வேலை போதவில்லையா?;-)
“காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்”—- நல்ல வேலை!!!.எங்களுக்கு படிக்கக் கிடைத்தது கவிதைகள்.
LikeLike
🙂
LikeLike
எதுவும் தெரியாது
உன்னைப் பற்றி
எல்லாம் காதல் கற்றுத்தரும்
என்ற நம்பிக்கையில் …
LikeLike