Tags

 

 

 

 

உன்னை நினைவு கூறும்

அடையாளங்களைச் சந்திக்கும்

போதெல்லாம்

புதியதோர் கவிதையையும்

சந்திக்கிறேன்

 

——————————————————————-

 

என்றென்னை

நீயும் சந்திக்கிறாயோ

அன்று உனக்கு மட்டும்

கவிதைகள் சொல்லிக் கொண்டிருப்பேன்

காதோரமாய்…

 

—————————————————————-

 

உன் ஒவ்வொரு புன்னகையின் போதும்

எங்கோ புதிதாய் பூக்கின்றன

பெயர் தெரியாத சில பூக்கள்…

 

———————————————————-

 

உன் நிழல் கூட

அறியா வண்ணம்

உன்னுள் நுழைந்தே தீருவேன்

ஒரு நாள்…

 

————————————————————

 

உன் நினைவு தோன்றுகையில் எல்லாம்

ஒரு துளி மழை

சேர்த்துக் கொண்டிருக்கிறேன்

கடல் மட்டம் உயர்வதாக

யாரோ  சொல்லிச் செல்கிறார்கள்…

——————————————————————-

 

என் படுக்கை அருகே

வைத்திருக்கும்

ரோஜா செடியில் என்றெல்லாம்

பூ பூக்கிறதோ

அன்றெல்லாம் நீ என் கனவில் வந்ததாய்

அர்த்தம் கொள்க ..

 

——————————————————————-