Tags
எனக்கான தலைவிதி
உன் கண்களில் ஓடும்
ரேகைகளில் இருக்கிறது …
———————————————————-
உன்னிடம் மட்டுமே பேசுவதற்காய்
நிறைய வார்த்தைகள்
சேர்த்து வைத்திருக்கிறேன்
மெளனத்தின் மொழியில் …
————————————————————
இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்
காதலையும் தந்து விடேன்
வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்
உன் கவிதைகளை…
—————————————————————
உனக்கெடுக்கும் வார்த்தைகள் மட்டும்
வாசனையோடு வருகின்றன
ஆனால் எனக்கு தான்
ரத்த வாடை பிடிப்பதில்லை..
—————————————————————-
நீ வீட்டை விட்டு வராத நாட்கள்
விடுமுறை நாட்கள்
—————————————————————–
நான் தனிமையில் இல்லை
உன் நினைவுகள் போதுமென்று
எல்லவற்றையும்
விரட்டிவிட்டு விட்டேன் .
——————————————————————–
//இவ்வளவு கவிதைகள் தந்து விட்டாய்
காதலையும் தந்து விடேன்
வேண்டுமானால் திருப்பித் தந்துவிடுகிறேன்
உன் கவிதைகளை…//
சின்னக்குழந்தைகள் விளையாட்டு போல, இந்த வரிகள் ரொம்ப அழகா இருக்கு ……
LikeLike
🙂
EXAM கும் கொஞ்சம் படிங்க .. 😉
LikeLike
🙂
LikeLike
//EXAM கும் கொஞ்சம் படிங்க .. //
you too 😦
LikeLike
மௌனத்தின் மொழிகள், தனிமை நிரப்பும் நினைவுகள்.இரண்டும் சூப்பர்.:)
LikeLike
🙂
LikeLike
பூவிதழ்கள்-கை விரல்கள்.(அப்பப்பா!!! தாங்க முடியல!!!)
LikeLike
சூப்பர் உங்க கவிதை அனைத்தும்
LikeLike
நன்றி பிரியசகி 🙂
LikeLike