Tags

 

 

 

 

ஜன்னல் திறந்ததும்

ஆச்சர்யம் கொள்ளாதே

வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து

வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..

 

———————————————————– 

 

ஒவ்வொருமுறையும்

நீ கண்ணிமைக்கும் போதெல்லாம்

இமைகள் தொலைக்கிறேன் நான்…

 

————————————————————

 

மழை விழப்போவதை அறிவித்துவிட்டு

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ

அவ்வளவு சீக்கிரம்

உன் வீட்டுக்கு ஓடிவந்துவிடுகின்றன

வானவில்கள்…

 

—————————————————————

 

சத்தமிடாத வளைகள்

கண்டுபிடிக்கப்படவில்லை இன்னமும்

வேண்டுமானால் சிரித்துப்பாரேன்

மெளனமாகக் கூடும் அவைகள்.

————————————————————–

 

உன்னுடன் பேச

ஒத்திகை எடுக்கும் போதுதான்

உணர்கிறேன்

இத்தனை சிறிய மொழியா

தமிழ்???

 

—————————————————————

 

என் ஒவ்வொரு அணுக்களிலும்

பூ பூக்கும் போதே

அறிந்து கொள்வேன்

நீ என்னைக் கடந்து செல்வதை

கண்கள் மூடியிருப்பினும்..

 

—————————————————————–