Tags
என் விரல்கள் பேசிய கவிதைகளே
இன்னும் சந்திக்க வில்லை
முட்டாள் உதடுகள்
அவைகளும் பேச வேண்டுமாம்
———————————————————-
எங்கே விழுந்தாலும்
தாங்கிப் பிடிக்க வந்துவிடுகிறதுன் பிம்பம்
மலராடைகளில் உதிரம் பட்டுவிடாமல்
பார்த்துக்கொள்
———————————————————–
எக்காலத்திலும் என் கிளைகளுக்கு
இலையுதிர் காலம் தான்
இலைகளை ஒட்ட வைக்கவோ
பூ பூக்கச் செய்யவோ
நீ தான் வர வேண்டும்
—————————————————-
கனவிலிருந்து கலைந்து
போனபின் எல்லாம்
கவிதையாய் வந்து சேர்கிறாய்
மீண்டும் என்னிடமே …
—————————————————–
காதலே …
என்ன ??
என் காதலை வடிக்க
உலகிலேயே உயர்ந்த வண்ண
மை வேண்டும்
உன்னிடமே உள்ளதது
உன் கண்ணீர் தானது …
அன்றிலிருந்து தான்
நனையத் துவங்கியதென் காகிதம்
நிறமில்லாமல் …
———————————————————–
இரவு முழுவதும்
உருகிக்கொண்டிருந்தேன்
விடிந்ததும் அணைத்துச் சென்றாய்
புகைந்து கொண்டிருக்கிறேன் ..
———————————————————————-
//இரவு முழுவதும்
உருகிக்கொண்டிருந்தேன்
விடிந்ததும் அணைத்துச் சென்றாய்
புகைந்து கொண்டிருக்கிறேன் ..//
முடிந்தால் ,மெழுகுவர்த்தியும் ரசித்திருக்கும்
இந்த வரிகளை உருகி..உருகி 🙂
//எங்கே விழுந்தாலும்
தாங்கிப் பிடிக்க வந்துவிடுகிறதுன் பிம்பம்
மலராடைகளில் உதிரம் பட்டுவிடாமல்
பார்த்துக்கொள் ….//
இந்த வரிகள் எனக்கு புரியலை . ………….
// என் விரல்கள் பேசிய கவிதைகளே
இன்னும் சந்திக்க வில்லை
முட்டாள் உதடுகள்
அவைகளும் பேச வேண்டுமாம் ..//
முட்டாள் உதடுகளா….? உதடுகள் சொல்லாட்டி ,அவங்களுக்கு எப்படி உங்க விரல்களும் பேசும் மாயம் தெரிய வரும் ?? 🙂
LikeLike
இலைகள் எனும் அவளின் நினைவுகள் உதிர்ந்துதாலும் அவைகள் மக்கி உரமாகி அவளின் நினைவுகளை விருட்ஷமாக வளர்க்கத்தான் …இந்த இலையும் அப்படிதான் …
LikeLike
தோழரே, தங்களது வருகையும் கருத்துகளும் எப்பொழுதும் எனக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது . 🙂 ,மறுபடியும் கேட்பதற்காக மன்னிக்க .. தங்களது தளத்தின் முகவரி வேண்டும். தங்களது அழகிய வரிகளைப் படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.
LikeLike
@ ரேவதி ,
// உதடுகள் சொல்லாட்டி ,அவங்களுக்கு எப்படி உங்க விரல்களும் பேசும் மாயம் தெரிய வரும் ?? //
அவங்களா ?? மறுபடியும் சொல்றேன் .. கவிதை சொன்னா அனுபவிங்க .. ஆராயாதீங்க .. இன்னும் கேள்வி கேக்கறதா நிறுத்தலியா ??? 😉
LikeLike
அன்பு தோழாருக்கு… எனக்குஎன்று தளம் இல்லை இனி முயற்சிக்கிறேன் நான் ஒரு பண்பலை வானொலி தொகுப்பாளர் இலக்கியம் மீதுகொண்ட காதல் உங்களை போன்ற நல்ல நட்பும் எழுத்துகளும் கிடைக்கபெற்றேன் தேவை என்றால் தொலைபேசி எண் தருகிறேன் நன்றி
LikeLike
சில ஆசிர்வதிக்க பட்ட நிமிடங்களில் உதடுகள் பேசாது பேசவும் முடியாது ஆம் அந்த நிமிடங்களில் விரல்கள் உதட்டின் வரிகளை படிக்கலாம் கண்ணில்லாதவன் போல் ..சரிதானே தோழா…….
LikeLike
///எங்கே விழுந்தாலும்
தாங்கிப் பிடிக்க வந்துவிடுகிறதுன் பிம்பம்///
நன்றாக இருக்கிறது.அருமையான கவிதை.
LikeLike
அனுபவித்துச் சொல்லுகிறீர் தோழரே 🙂
LikeLike
நன்றி கோகுல் 🙂
LikeLike