Tags

, ,

 

 

என் விரல்கள் பேசிய கவிதைகளே

இன்னும் சந்திக்க வில்லை

முட்டாள் உதடுகள்

அவைகளும் பேச வேண்டுமாம்

 

———————————————————-

 

எங்கே விழுந்தாலும்

தாங்கிப் பிடிக்க வந்துவிடுகிறதுன் பிம்பம்

மலராடைகளில் உதிரம் பட்டுவிடாமல்

பார்த்துக்கொள்

 

———————————————————–

 

எக்காலத்திலும் என் கிளைகளுக்கு

இலையுதிர் காலம் தான்

இலைகளை ஒட்ட வைக்கவோ

பூ பூக்கச் செய்யவோ

நீ தான் வர வேண்டும்

 

—————————————————-

 

கனவிலிருந்து கலைந்து

போனபின் எல்லாம்

கவிதையாய் வந்து சேர்கிறாய்

மீண்டும் என்னிடமே …

 

—————————————————–

 

காதலே …

 

என்ன ??

 

என் காதலை வடிக்க

உலகிலேயே உயர்ந்த வண்ண

மை வேண்டும்

 

உன்னிடமே உள்ளதது

உன் கண்ணீர் தானது …

 

அன்றிலிருந்து தான்

நனையத் துவங்கியதென் காகிதம்

நிறமில்லாமல் …

 

———————————————————–

 

இரவு முழுவதும்

உருகிக்கொண்டிருந்தேன்

விடிந்ததும் அணைத்துச் சென்றாய்

புகைந்து கொண்டிருக்கிறேன் ..

 

———————————————————————-