Tags

“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”

தலையணை தினமும்

உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே

கண் சாய்க்கிறேன்.

——————————————————–

நான் வாங்கும் எல்லாத் தூரிகைகளும்

உன் பெயர் மட்டுமெழுதியே

இறந்து போக முடிவு செய்கின்றன…

——————————————————–

உன் மொத்த அழகையும்

எழுத முயன்று

தோற்ற கவிதைகளே

என்னிடமுள்ளவைகள்..

—————————————————–

கண்மூடிக் கேட்கையில்

இசையாய் வந்திறங்குகிறாய்

இமைகளில்…

————————————————–

இரவு சட்டென்று கண்விழிக்கையில்

மின்னலென தோன்றி மறைந்த கவிதையை

காலை எழுந்ததும் எழுத அமர்கையில்

கவிதை மறந்துபோய்

காகிதத்தில் நீயே வந்தமர்கிறாய்

திருப்தியாய் எழுந்து செல்கிறேன்

நான்.

—————————————————–