Tags
அறிமுகமில்லாத தெருக்கள்
நீண்டு கொண்டே செல்கின்றன
எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….
காற்றில் பறக்கும் இறகென
அருகில் வருகிறாய்
விரல் தொடும் நேரத்தில்
விலகி மிதக்கிறாய் ..
கண்களை மூடிக் கொண்டு
உன்னை நெருங்கிடப் பார்க்கிறேன் ..
நினைவுக்கு வர மறுக்கும் கனவென
பிம்பங்கள் அல்லாத
தடையங்கள் மட்டும் – நீ
வந்து போனதன் அடையாளமாய்
விழிகளுக்குள் இருக்கின்றன …
யுகங்கள் தேடி – உனை
நெருங்கிடும் சமயங்களில்
கிடைத்தல் அல்ல
தேடல் சுகமென்கிறாய்
விரும்பித் தொலைக்கிறேன் …
எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….
Thanks for the photo Bala 🙂
LikeLike
காற்றில் பறக்கும் இறகென
அருகில் வருகிறாய்
விரல் தொடும் நேரத்தில்
விலகி மிதக்கிறாய் ..
— super.
– Pravinska.
LikeLike
yennayum antha kathal thottu vittu poyi irukkamnu nenaikka thonuthu.
LikeLike