Tags
“அன்பே”
எனத் தொடங்கி
ஒரு காதல் கவிதை எழுதிட
வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.
அபத்தமாய் இருக்கிறது.
அந்த நாட்களைக் கடந்துவிட்டேனோ.
பத்திரிக்கையின்
ஏதாவதொரு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்
சிகப்பு இதயத்தினுள் அம்பு துளைத்த படத்தையொட்டிய
கவிதையினி
புன்னகை தராதோ !
உன் பார்வை ஒன்றின் நினைவு
போதாதோ
என் விரல்களின் வழி
வார்த்தைகள் இறங்கி வர …
பார்பதை எல்லாம் வார்த்தைகள் கோர்த்துக்
கவிதைகளென்றிருந்தேனே
எங்கே போயின அந்த மாலை நேரங்களும்
மஞ்சள் வெயில் நாட்களும் …
ஒரு கவிதை என்னுள்
ஏற்படுத்தியிருந்த தாக்கங்களும்
என்னுள்ளான தாக்கங்களால்
ஏற்பட்டிருந்த கவிதைகளும்
எப்படிப் போயின காணாமல் …
கவிதைக்குரிய எல்லா வார்த்தைகளும்
என்று அழிந்து போயின
என் அகராதியில் இருந்து …
இப்பொழுதிருக்கும் நானாக
எப்பொழுது மாறிப்போனேன் …
இனியுமொரு கவிதை எழுதிட
என் வார்த்தைகளில் உயிரில்லை என
நம்புவதில் எதற்கித்தனை பிடிவாதம் …
“அன்பே”
எனத் தொடங்கி
ஒரு காதல் கவிதை எழுதிட
வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.
அபத்தமாய் இருக்கிறது.
———————————————————————————————–
அடுத்தவங்க சோகத்தை ரசிக்க கூடாது தான்…..ஆனா வாய்ப்பே இல்ல….இந்த கவிதை அழகான சோகம் 🙂
LikeLike
🙂
LikeLike
Awesome!!! Good One!!!
LikeLike
Kaavidhaiyil oovvoru varium arumai nga..adhula “unn paarvai ondrin ninavu podhadho..enn viralgalin vazhi vaarthaigal irangi vara…”….vaaipe illa semaya sollirukinga..
LikeLike
Thanks.
LikeLike