Tags
புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்
மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..
திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …
என்றோ கற்றுக்கொண்டுவிட்டிருக்கும்
கெட்ட வார்த்தைகள்
தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்
சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல
வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து
இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …
யாரையும் காயப்படுத்திவிடுவேனோ
என மௌனித்திருந்த
கடைசி இருபத்தினான்கு மணி நேரங்களின்
பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்
பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்
தன்னைத் தானே வதைத்துக் கொள்வது
படு முட்டாள்தனமான காரியமென
மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …
நான் காயப்படக்கூடும் என்ற
எவ்விதப் பிரக்ஞையுமின்றி
என்னைப் பற்றிய மதிப்பீடொன்று
எய்யப்பட்டு விடும் முன்
எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு
பேசலாமென்ற சிந்தனையிலேயே
அர்த்தமற்ற வார்த்தைகளால்
நிரம்பிவிடுகின்றன
எல்லா உரையாடல்களும் …
கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்
எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்
தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்
என் படுக்கை அறையின் ஜன்னல்கள்
களவாடப்பட்டிருக்கின்றன
எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன
எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்
எழுதப்படுகின்றன
குடைக்குள் வர மறுக்கின்றன
மழையும் மழை சார்ந்த எதுவும் …
கண்ணீரும் கவிதையும் இசையும்
தருவிக்கப்பட்ட புன்னகையும்
நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று
தெரிந்துபோன
இச்சபிக்கப்பட்ட தருணத்தில்
ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.
Dei, romba polambura da!! get a girl friend or as your parents to expedite the search!! :-P)
LikeLike
Yov evlo serious aah naan kobapattu irukken .. polambarenaam la .. 😉
LikeLike
seeni
உன் கம்பெனி மேல இருக்கற வெறுபுல
எழுதி இருகறனு நான் நினைகிறேன்
LikeLike
வெறுப்பு இல்ல .. ஒரு கோபம் .. எல்லார் மேலயும் .. பார்க்கற எல்லாம் மேலயும் ..
LikeLike