உன் நினைவாக வைத்திருக்கும்
புத்தகமொன்றின்
பழுப்பேறிய பக்கமொன்றிலிருந்து
விரல் தொட்டது
என்றோ நீ சூடி
தொலைத்த பூ ஒன்று …
இடைப்பட்ட நாளொன்றின்
நடுச்சாமத்தில்
தப்பியோடிவிட்டிருக்கிறது
உன் வாசனை …
எவ்வளவு வருடியும்
மீட்டெடுக்க முடியவில்லை
உன் ஸ்பரிசத்தை…
“காலம் கடந்து விட்டதா
இருவருக்கும்”
என்றேன்.
“அல்லது காலத்தை நாம்
கடந்திருக்கலாம்”
என்றபடி
காற்றில் கரையத் தொடங்கியது.
அற்புதம் , ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? மனம் கனத்து பிரிவுத்துயரில் இருக்கும் மனிதனுக்கு பெரும் ஆறுதலாக இருக்கின்றன உங்களது கவிதைகள்.
இந்த வலைப்பூவில் உள்ள அனைத்தையும் ஒரு தொகுப்பு நூலாக அச்சேற்றுங்கள். முதல் பிரதி எனக்கு
நன்றி.. எழுதுங்கள் நண்பரே
LikeLike