Tags

, , ,

Teacup1-1

எனக்கு பிடித்த பாடல்கள்

இனி உன்னுடையதல்ல

எதற்காக இன்னும்

என் சொற்களின் மேலேறி

பவனி வருகிறாய்

எனது இரவுகள் உனக்கானதில்லை

எதை நினைவுபடுத்த

மீண்டுமென் கதவு தட்டுகிறாய்

நம் கடைசிச் சந்திப்பில்

நீ அருந்திய

தேனீர் கோப்பையின் அடியில்

காய்ந்து போய் கிடக்கின்றன

உன் உதடுகள்

எல்லா பேருந்து ஜன்னல்களிலும்

இன்னமும் நீ

நீ என்பது

நீ மட்டுமல்ல

உன் நினைவுகளும் தான்

உன் நினைவுகளென்பது

நினைவுகள் மட்டும் தான்

நீ அல்ல

***