டிராகன் இளவரசி 12 Wednesday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsகவிதை, Love poems, poem, poems, tamil, tamil Kavithaigal, tamil poem நீ வருவதாய் சொன்ன வாசலின் முன்பு தான் நின்று கொண்டிருக்கிறேன் வந்திருப்பது ஏன் என்று உனக்கும் புரியும் நீ வரச்சொன்ன காரணமும் எனக்குத் தெரியும் இன்னும் எத்தனை காலம் இதே விளையாட்டு நான் தட்டப்போவதும் இல்லை நீ தாழ்பாள் இடவும் இல்லை பின்னே எதற்கிந்தக் கதவு நீ வரச்சொல்வதும் நான் வந்து நிற்பதும் நீ தள்ளிச் செல்வதும் நான் தயங்கி நிற்பதும் நீ மறுத்துப் போவதும் நான் மரத்துப் போவதும் மீண்டும் நீ வரச்சொல்வதும் நான் வந்து நிற்பதும் கண்ணீரும் கவிதையும் வார்த்தை மாறாமல் நடப்பது தானே ஏற்கனவே படித்த புத்தகம் எத்தனை முறை புரட்டினாலும் மாறியா போய்விடும் கடைசி வரி நான் வேறு புத்தகத்தைத் தொடப்போவதுமில்லை நீ இந்தப் புத்தகத்திற்குள் வரப்போவதுமில்லை பின்னே எதற்காக எழுதப்பட்டது நமது கதை இந்தக் கோட்டையின் உச்சியில் உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும் வேறில்லை என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம் இத்தனைக்கும் பிறகு உன் கூந்தல் ஏணி கீழே வரக் காத்திருக்கக் காரணம் ஒன்று தான் நம் முதல் முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு நமக்குத் தரப்படவேயில்லை பின் எப்படித் தீரும் நம் சாபம் *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading... Related