
மழைவாசமும்
மழலை வாசமும்
பிடிக்காதவர்கள் உண்டா
யாரேனும் இங்கே ??
நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்
விசாரிக்கத் தேவை இல்லை
என்னைப் பற்றி…
இருக்காது நிச்சயம்
என் பெயர் அதில் …
நாட்காட்டியுடன்
நவம்பர் மாதத்திற்காக
காத்திருப்பவன் நானும் தான் …
அடுக்குமாடிக் குடியிருப்பில்
அடைக்கப்பட்டவர்களில்
ஒருவன் தான் என்றாலும்
நானொரு மழைப்பாடகன் என்பதில்
என்றுமே பெருமை உண்டெனக்கு …
அடைமழை பெய்யும் போது
அணைப்பதில் விருப்பம் சிலருக்கு
எட்ட நின்று ரசிப்பதில்
திருப்தி பலருக்கு …
உதடு குவித்து
முத்தம் தரப் பிடிக்கும்
சிலருக்கு
உள்ளங்கை காட்டி
முத்தம் வாங்கப் பிடிக்கும்
பலருக்கு …
மழையினில் நனைந்து
கொட்டும் ஒவ்வொரு துளியையும்
குருதியில் குழைத்து
மழையாகிடவே கனவெனக்கு..
எனது சில ஆயிர வினாடிகளுக்கு
தற்காலிக ஓய்வு தந்துவிட்ட
மாலை நேரம் அது
மெல்ல மழைநேரமாயும்
ஆகிக் கொண்டிருந்தது …
உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்
மீண்டும் சென்று மேகம் சேரும் …
உன் போலத்தானா
நானும் மழையே ..!
மழை தொட்டு
முத்தமிட்ட மண் கிளம்பும்
வாசம் போல்
என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட
நம் நியாபகங்கள் …
எப்படி இருக்கிறாய்
என் பிரிய தோழி …
Continue reading →
Like this:
Like Loading...