Tags
அபூர்வா .. அபூர்வா .. அபூர்வா …
அவள் மூஞ்சியைப் பார்க்க வேண்டுமே .நல்ல பெண் போல சேலையைப் போர்த்திக் கொண்டு வந்து எதுவுமே தெரியாதவள் போல் என் முன்னாலேயே வந்து நிற்கிறாள் . நீல நிற புடவை .
நான் வெறுக்கும் ஒரே நிறம் . ச்சே நீங்கள் அங்கே இல்லாமல் போய்விட்டீர்களே .
நீதி மன்றத்தில் …. சாதனாவை கொன்றவர்களை சும்மா விடலாமா .. இல்லை விட்டு தான் விடுவேனா … கொஞ்சம் நேரம் தப்பியிருந்தால் என்னையும் கொன்றுவிட்டிருப்பார்கள் . மென் ஆப் ஹாலோசாம் .. சன் ஆப் ……… உங்களுக்கு நடந்ததை எப்படித் தெளிவாக சொல்லுவது . ஹ்ம்ம் .. சரி .. அது தான் சரி .. நானே நடித்துக் காட்டுகிறேன் .
நான் தான் அபூர்வா இப்பொழுது .
இப்படித்தானே புடவைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு இரண்டு கால்களையும் இணைத்து வைத்துக் கொண்டு நின்றாள்.”நான் சொல்வதெல்லாம் உண்மை .. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை ” முதலில் பகவத் கீதையை அவமதிப்பதை
நிறுத்த வேண்டும் .
“நீங்கள் எதாவது கூற விரும்புகிறீர்களா அபூர்வா ” எனக்கு அந்த நீதிபதியைப் பிடிக்கவே இல்லை . எதுவும் விசாரிக்காமல் தூக்கில் போட்டிருக்க வேண்டாமா அவளை .நான் சொல்லுகிறேன் போதாதா .. அதென்ன நம்பிக்கை இல்லாமல்
அவளையும் கேட்பது .
நீலிக் கண்ணீர் .. நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் . “என் கணவர் இப்படி ஒரு குற்றம் சுமத்தும் பொழுது நான் என்ன சொல்ல …” அடேயப்பா .. எப்பேர்ப்பட்ட நடிப்பு .