பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: ஆதலினால் கவிதை …

துப்பறியும் வரிகள்

13 Wednesday Oct 2021

Posted by rejovasan in Uncategorized

≈ Leave a comment

Tags

ஆதலினால் கவிதை ..., Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

It's a Man's World

ஒரு பிரத்யேக நாளுக்காய்

காத்திருந்த

உன் விருப்பத்துக்குகந்த கிண்ணத்தில் 

ஒரு கேக் துண்டுப் புதிரை

நிறுத்திச் சென்றிருக்கிறாய்

 

வளையமிட்டிருக்கிறாய்

உன் மாய விரல்களால் 

 

தொடாமலே எறும்பொன்று

 

வெள்ளைச் சர்க்கரைப் பூச்சு

ஓரமாய் உருக 

தோல் சுருங்க

உச்சியின் செர்ரிப்பழம்

 

பாதி மௌனத்தில்

புகைந்த மெழுகுவர்த்தி 

உதடுகள் குவிக்குமுன்

என்ன வேண்டினாய் ?

 

காலிக் கோப்பை அருகில் 

ஆழத்தில் 

காய்ந்த ஒயின் கறை

விளிம்பில் உன் பாதி இதழ்

 

சொற்களை விடுத்து

உன் குரலை

எடுத்துச் சென்றிருக்கிறாய் 

 

நீ களைந்த ஆடைகளை

மொய்த்தபடி அந்துப்பூச்சிகள்

 

உனது தானியங்களுக்காகவும்

ப்ரியங்களுக்காகவும்

உப்பரிகையில் காத்திருக்கின்றன

புறாக்கள்

 

நீ துவட்டிய 

தூவாலை மட்டும் 

வெய்யில் பார்த்தபடி

மீண்டும் மீண்டும்

 

எங்கே புறப்பாடு 

எப்பொழுது மீள்வருகை 

எந்த குறிப்பொட்டியுமில்லை 

குளியலறைக் கண்ணாடி மேல்

 

யாயொரு தடையமும் 

இன்றி

காற்றில் கரைந்திருக்கிறாய்

 

கிளம்பும் அவசரத்தில் 

கூட்டிச் செல்ல மறந்திருக்கிறாய்

என்னை 

 

கதையின் 

கடைசி வரியினில்

அவிழ்கிறது புதிர்

 

ஆலகாலக் கோட்டினை

அழித்துவிட்டு 

இனிப்பிற்கு வழி விடுகிறேன்

 

நடுங்கத் தொடங்குகிறது

உன்மத்தத்தில் எறுப்பு

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

கீழிருந்து மேலாய் ஏழாவதாய்

08 Friday Oct 2021

Posted by rejovasan in Uncategorized

≈ 1 Comment

Tags

ஆதலினால் கவிதை ..., Love poems, poem, tamil Kavithaigal, tamil poem

Dark art for our inner demons

அன்று மழை பெய்ததா

தெரியவில்லை

பெய்திருக்கத்தான் வேண்டும்

நினைவில் குளுமை

கண்களில் வெளிச்சக் கீற்று

உடலில் ஒட்டிக் கொள்ளும்

ஆடை

காற்றில் கரைகிறது 

எனது வெளி

ஒரு சுழலில் ஒரு நொடியில்

நிச்சயம் அங்கே தான்

இருக்கிறேன்

மனதில் முணுமுணுத்திருந்த

அதே பாடல் கூடக் கேட்கிறது

நகர்ந்தபடி இருக்கிறது

உள்ளே வரச்சொல்லிப் படபடக்கும்

கனவின் வாசல்

நீலச்சிறகு பட்சிகள் வல்லுகிர் பற்றிய

வருகைப் பதிவேட்டில்

கீழிருந்து மேலாய்

ஏழாவதாய்

உன் சாய்ந்த கையெழுத்து

சுழன்று ஏறும்

படிக்கட்டுகளை

விழுங்கிக் கொண்டிருக்கின்றன

வனயட்சியின் நாவுகள்

வானம் தேடி அலைந்தபடி

தொட்டிப்பூக்கள் வாசனை

இடதும் வலதுமாய்

திசைகாட்டிக் குதித்தோடும்

மஞ்சற் மாயப்பூனைகள்

எத்தனை பாதைகள்

எத்தனை திருப்பங்கள்

எத்தனை நிகழ்தகவுகள்

எத்தனை கதவுகள்

தவறான இடத்தில்

சரியான நேரத்தில்

ஒரு புதிர்விளையாட்டின்

வலைப்பின்னலில்

தொலைந்து போய்

வந்து நின்றது

இரண்டு வினாடிகளில்

நீ வெளிவரப்போகும்

கதவின் முன்னால்

கதவின் பின்

பூஜ்ஜியமும் ஒன்றும் பேசும்

ஓராயிரம் வெளிச்சப் பூச்சிகள்

அத்தனையும் தாண்டி

உன் ஒரு புன்னகை

அங்கே முடிகின்றது

இந்த நினைவுத் துண்டு

எவ்வளவு துளாவியும்

நினைவின் பெட்டகத்தில்

அதன் பின் கதைத்தொடர்ச்சி

காணக் கிடைக்கவில்லை

இப்படித்தான் நடந்ததா ?

இப்படியும்

நடந்திருக்கக் கூடும்

தெரியவில்லை

ஆனால் அன்று

நிச்சயம் மழை பெய்தது.

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

மீண்டும்…

20 Monday Apr 2009

Posted by rejovasan in கவிதை

≈ 6 Comments

Tags

ஆதலினால் கவிதை ..., poem

 

ஏதோ ஒரு தவறு செய்துவிட்டு

இறைஞ்சி நிற்கிறேன்

உன் முன்னால் …

 

கோபம் கொண்ட பாவனையில்

விழி உயர்த்திப்

போதுமட்டும் ரசித்துவிட்டு ,

கைகுட்டையில் மீதம் வைத்திருந்த

மன்னிப்புகளில் ஒன்றை எடுத்து வீசிப்

புன்னகைக்கிறாய் ரகசியமாக ..

 

மீண்டுமொரு தவறு செய்யத் தயாராகிறேன் …  

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

மரணத்தைப் பற்றிய கனவு ….

19 Wednesday Nov 2008

Posted by rejovasan in கவிதை

≈ 4 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

சற்றேறக்குறைய

கண்விழித்த கடிகார முள்ளின்

நிமிட பின்னோட்டத்தில்

என் கனவிலிருந்திறங்கி

காணாமல் ஓடிப்போயிருந்ததவ்வுருவம் …

பகலின் நிர்வாண வெளிச்சத்திலும்

வறண்ட காற்றின் வெக்கையிலும்

தேடிக் கொண்டேயிருந்தன யென் கண்கள் ..

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு

26 Sunday Oct 2008

Posted by rejovasan in கவிதை

≈ 1 Comment

Tags

ஆதலினால் கவிதை ...

 

 

கடந்து மறைகின்ற திருப்பங்களில் எல்லாம்

பிம்பங்களை உதிர்த்த வண்ணம்

என் விரல் பிடித்து வந்துகொண்டிருக்கின்றன

கனவுகள் 

 

 

கையிலிருக்கும் பொம்மைகளை எல்லாம்

தூக்கி  எறிந்து விட்டு

கடைவாயில் எச்சிலொழுக சிரிக்கும்

குழந்தை போல

ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கும்

பிம்பங்களை எல்லாம்

உதறி எறிந்து விட்டு சிரிக்கின்றன கனவுகள்

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: