தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
நாடு நகரங்கள் தாண்டி
காடுகள் புகுந்து மீண்டு
சில மலைகளைத் துளையிட்டு
வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை
நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன
வழியனுப்பிகளின் முகங்களையும்
கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்
நாம் ஏறிய ரயில் நிலையங்களின்
நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….
தட தடத்துச் செல்கின்றன
ரயில் வண்டிகள்
தண்டவாளங்களின் மேலும்
நாம் இறங்கிய பின்னர்
நம்முள்ளும் ….