பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: ஆதலினால் கவிதை …

அதிர்வுகள்

24 Friday Oct 2008

Posted by rejovasan in கவிதை

≈ 4 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

நாடு நகரங்கள் தாண்டி

காடுகள்  புகுந்து மீண்டு

சில  மலைகளைத் துளையிட்டு

வெகுதூரம் அழைத்துச் செல்கின்றன நம்மை

நம்முடன் ஏறிக்கொள்ள மறந்து போன

வழியனுப்பிகளின் முகங்களையும்

கடைசிச் சந்திப்புகளின் நினைவுகளையும்

நாம் ஏறிய  ரயில் நிலையங்களின்

நடை மேடைகளிலேயே விட்டுவிட்டு ….

தட தடத்துச் செல்கின்றன

ரயில் வண்டிகள்

தண்டவாளங்களின் மேலும் 

நாம் இறங்கிய  பின்னர்

நம்முள்ளும் ….

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

நி(ந)னைவுகள்

23 Thursday Oct 2008

Posted by rejovasan in கவிதை

≈ 5 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

மழையில் நனைவதாய்

நெடுநேர பிரமை …

என் நீண்ட பாதை முழுவதும்

நிலவும் விண்மீன்களும்

கதை பேசியபடி வந்தும்

காற்றின் வெம்மை

மழையின் ஸ்பரிசத்திற்கு

மறுப்பு தெரிவித்தும்

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

விண்மீன்களின் ரகசியங்கள்

22 Wednesday Oct 2008

Posted by rejovasan in கவிதை

≈ 2 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

இரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்

ரகசியங்களின் நிழல்களை

உற்றுப்பார்த்துக்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன

விண்மீன்கள் …

எல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்

எலிகள் வரக்கூடுமென

புகைபோக்கியின் துளைகளும் கூட

அடைக்கப்பட்ட பின்னும்

கூரைகளைத் துளைத்து

எட்டிப் பார்க்கின்றன அவைகள்

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

ஆயிரம் பௌர்ணமி இரவுகள் …

21 Tuesday Oct 2008

Posted by rejovasan in கவிதை

≈ 8 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

கொஞ்ச நாட்களாய் ஏனோ

என் கன்னங்களில்

சிவப்பு பூசிக் கொண்டே தான் எழுகிறது

காலைப் பொழுதுகள் …

————————————————–

நாட்காட்டியில்

தினம் நூறுமுறை

யாரும் பார்த்திடாவண்ணம்

தேதி பார்த்திடும் போது

அச்சமும் கூச்சமும் பின்னிக் கொள்கின்றன

ஒரே அலைவரிசையில் என்னை …

————————————————–

நம் திருமண இரவன்று

உனக்குப் பரிசாகத் தருவதற்காக

வைத்திருக்கிறேன்

ஒரு கோடி ஆசைகள் ….

————————————————–

என் ஒவ்வொரு நொடிகளும்

உதடுகள் துடிப்பது

அதை உச்சரிக்கும் வேளை

எண்ணித்தான் ….

————————————————–

கேட்கிறாயா இப்பொழுதே …

————————————————–

நம் படுக்கை முழுவதும்

பொம்மைகள் வைத்து

விளையாடிட வேண்டும்

சில சமயம் நீ விளையாடிட

பொம்மையாகிட வேண்டும்

நானே ….

————————————————–

கிளி ஒன்று வளர்த்து

“சீய் போடா ” என மரியாதை இல்லாமல்

அழைக்கச் சொல்லித்தர வேண்டும்

நீ வேலைக்குச் சென்று விட்ட

வெறும் பகல் நேரத்தில் …

————————————————–

திடீர் அணைப்புகள்

தினம் தேவை

திருட்டு முத்தங்கள்

தினம் ஒரு முறையாவது …

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

அது ஒரு நிழற்காலம் ..

20 Monday Oct 2008

Posted by rejovasan in நெடுங்கவிதை

≈ 2 Comments

Tags

ஆதலினால் கவிதை ...

வெகு காலத்திற்கு முன்பு

காலமும் நானும் கூட

கணக்கு வைக்க மறந்துபோன

ஏதேதோ நாட்களில் தொலைந்து போன

என்னிழல்கள்

கூடியிருந்தன ஒன்றாய் …

அத்தனை நிழல்களும் ஆடையில்லாமல்

உண்மையின் நிர்வாணத்துடன்

இன்று மட்டும் உண்மை மட்டும்

உறுதியாய் இருந்தன அத்தனையும் …

இதுகாறும்

மௌனங்கள் மட்டுமே மந்திரமாய்

முணுமுணுத்துக் கொண்டிருந்த

அவைகளின் உதடுகள்

இத்தனை நாட்களுக்கும் சேர்த்து

தொலைந்த கதை பேசத்துவங்கின ..

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts
Newer posts →

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • துப்பறியும் வரிகள்

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: