பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: கதை நேரம்

காட்சிப் பிழைகள்

20 Monday Oct 2008

Posted by rejovasan in கதை நேரம்

≈ 4 Comments

Tags

கதை நேரம், மென்பொருள் துறை

 

 நன்றி : யூத் புல்.விகடன்.காம் 

 எல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .

 

ஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..

 

“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”

 

” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .

 

” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”

 

வழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .

 

ஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

கடவுளின் கணிப்பொறி

17 Friday Oct 2008

Posted by rejovasan in கதை நேரம்

≈ 4 Comments

Tags

கதை நேரம், புனைவு

 

நன்றி : யூத் புல்.விகடன்.காம்

 

                       பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம்  தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .

 

  தினமும் காலை எழுந்ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்

 கேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும்  வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …

 

  அவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .

 

 “என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா !”

 

இந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சர்வம் சூன்யம்-4

17 Wednesday Sep 2008

Posted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...

≈ 2 Comments

Tags

கதை நேரம்

 

சர்வம்-4

சர்வம்-4

“அப்பூர்வாஆஆஆ “

 

 

 

“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .

தலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சர்வம் சூன்யம்-3

10 Wednesday Sep 2008

Posted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...

≈ 1 Comment

Tags

கதை நேரம்

சர்வம்-3

சர்வம்-3

“அபூர்வா பாவமில்லையா ? இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது ? “

தெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .

மூன்று நாட்களுக்கு முன்பு ,

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

சர்வம் சூன்யம்-2

02 Tuesday Sep 2008

Posted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...

≈ 1 Comment

Tags

கதை நேரம்

சர்வம்-2

சர்வம்-2

அபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .

எங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .

அதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .

Continue reading →

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...
← Older posts

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...
  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • கனவில் வருபவள் 5
  • கனவில் வருபவள் 2
  • கனவில் வருபவள் 3

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Join 169 other followers
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: