Tags
யுத்தம் நிகழும் கணங்கள் நாவறுக்கப்பட்டவைகள்
அதன் பிறகு வருகின்ற நாட்களே
பைத்தியம் பிடித்து உன்மத்தமாய்
இறந்துபோகும் வரை பிதற்றியபடியிருக்கின்றன …
– யாரோ
இன்னமும் மூன்றே பேர்கள் .. இருவர் என் மனைவியின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆடைகளைப் பற்றியிருக்கிறவன் தான் முக்கியம் இப்பொழுது . அவளில் மேல் விழுந்திருக்கின்றன அத்தனை நகக்கீறல்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் .
என் கையில் இருந்த தடியால் அவன் பின் மண்டையில் பலமாக அடித்தேன் . இன்னமும் கொஞ்சம் ரத்தக்கறையானது . மீதமிருந்த இருவரும் என்னைப் பார்த்து ஒடத்துவங்கினார்கள் .