Tags
“பூமார்க் பீடி ஒரு கட்டு “
“மொதல்ல துட்டு .. அப்பறமாத்தான் கட்டு “
“பார்ரா பாய் டீயாரு கணக்கா வசனமெல்லாம் பேசறாரு .. இங்கன தான இருக்கோம் .. ஓடியா போயிருவோம் .. நம்ம பாய் கடைனு எவ்ளோ பாசமா வந்தா தொரத்துறியே “
“நீ ஓடி போனா சந்தோசப்பட போற மொத ஆளு நாந்தேன் .. தெனமும் காக்காய்க்கு சோறு எடுத்து வக்கிரா மாதிரி உனக்கும் எடுத்து வைக்க வேண்டியிருக்கு .. காக்காயாவது சோத்த தின்னுபுட்டு கா காய்னு காத்த வாச்சும் செய்யும் .. நீ என்னத்தப் பண்ற “
” ஒரு கட்டு பீடிக்காக ரொம்ப பேச வேணாம் பாய் .. நாங்க எல்லாம் மானஸ்தைங்க … துட்டு வெச்சுட்டு தான் அடுத்த தடவ பீடி கேப்பன் .. காக்கா தான் கா காணு கத்திட்டு அலையும் .. நாங்க எல்லாம் சிங்கம் தெரியும்ல ..”
“ஆக்கும் .. இங்க பார்யா .. இவுக சிங்கமாம்ல .. இந்த சிங்கம் பசிச்சா கறிக்கு பதிலா ஸ்டேசனுக்கு வந்து களி திங்கும் .. இப்போ என்ன கேஸு ..?”