Tags
நரகாசுரன் வேறு வேலையில்லாமல்
செத்துத் தொலைத்து விட்டான்
எத்தனை வெத்து வேலைகள்
நமக்கிங்கே …
தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக
ஒரு வாரமாய்
வீடு வராமல் உழைத்துக் கொண்டிருக்கும்
அலுவலகக் கணவன்கள் …
ஊரே உறங்கிய பின்
ஒவ்வொருவராய் கம்பளி போர்த்திக் கொண்டு
தான் போட்ட கோலத்தை
தெருவோடு ஒப்பிட்டுப் பார்த்து
பெருமூச்செறியும்
வீட்டு மனைவிகள் …