பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: Kathal Kavithaigal

யௌவனத்தில் நடுங்கும் இரவு

17 Monday Aug 2020

Posted by rejovasan in 2.0, கவிதை

≈ Leave a comment

Tags

காதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem

மூன்றாம் ஜாமம் முடிவதற்கு

சற்றுமுன்பு

என் இரவினில் இறங்குகிறாய்

சலனமில்லாத் தெப்பம் போல்

என்னைப் புதைத்திருக்கும் இருளுள்

உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய்

முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய்

ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும்

அறையின் ஏகாந்தத்தை

உன் ஒற்றைச் சிரிப்பில்

ஊதி அணைக்கிறாய்

கூரையிலிருந்து

பெரு மழையாய் பொழிகின்றன

பனியில் உறைந்த உனது செதில்கள்

ஆயிரம் தலைகளுடன்

சுவர் மொத்தமும் நெளிகின்றது

உனது நிழல்

ஆலகாலம் போல்

காற்றை நிறைக்கிறது

உனது சுவாசம்

உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று

இந்த இரவிற்கென

என்னை ஆயத்தப்படுத்துகிறது

எனது முதல் துளிக் கண்ணீரை

நா நீட்டிச் சுவைக்கிறாய்


மரணத்தின் வேட்கை போல்

எவ்வளவு உறிஞ்சியும்

தீரவேயில்லை உன் தாகம்

உனது யௌவனத்தில்

நடுங்கும் என் இரவு

உன்னை ஆயாசமடையச் செய்கிறது

அருகே படர்கிறாய்

உனது ஆலிங்கனத்தில்

பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின்

படபடப்பு

பற்றி எரிகிறது படுக்கை

உறைபனி விரல்களால்

மார்பினை வருடிக்

கண்களை மூடச் செய்கிறாய்

காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும்

நூற்றாண்டுகளின் தனிமையினையும்

என் காதோரமாய் சபிக்கிறாய்

பின்

உனது பற்களை அழுத்தி

என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய்

***

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

31 Thursday Jan 2013

Posted by rejovasan in வெண்ணிற இரவுகள்

≈ 3 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Kathal Kavithaigal, kavithaigal, poems, tamil Kavithaigal

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 169 other subscribers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • துப்பறியும் வரிகள்
  • கீழிருந்து மேலாய் ஏழாவதாய்
  • வழியில் தவறிவிட்டிருக்கிறது உன் வாசனை
  • பத்து இலக்க இடைவெளி
  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்

Top Posts

  • உனது நாட்குறிப்பிலிருந்து திருடப்பட்ட கவிதைகள் ...
  • மறந்து போன முதல் கவிதை …
  • என்னைச் சந்திக்க கனவில் வராதே ...

Create a website or blog at WordPress.com

  • Follow Following
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Already have a WordPress.com account? Log in now.
    • பட்டாம்பூச்சி விற்பவன்
    • Customize
    • Follow Following
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar
 

Loading Comments...
 

    %d bloggers like this: