பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: tamil kavithai

ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்

21 Sunday Mar 2021

Posted by rejovasan in Uncategorized

≈ 1 Comment

Tags

காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், tamil kavithai, tamil poem

How to Create Personal Affirmations

என்

தசாப்தக் காத்திருப்பினை 

ஓரு புன்னகையால்

கடந்து சென்றவள் நீ 

வழி தவறிய கானகத்தில் 

கடைசி தீக்குச்சியின் 

நடுங்கும் சுடர் நீ

யாக்கையின் விரிசல்களினூடே

கசிந்துருக்கும் பனிக்காலத்தின் 

பசி நீ

நெடுந்தூரப் பயணத்தின்

சட்டென்று கடந்து போகும் 

மீட்கொணரமுடியா

நினைவிலின்றும் அகலா

நட்சத்திரப் பூ மரம் நீ

என் இன்னுமொரு 

அசைவறு மாலையின்

வெயில் எரித்துப் படரும்

காமத்தின் நா நீ

எறும்புகளுக்கும் கொஞ்சமாய் 

மீதமிட்டுச் செல்லும்

சிட்டுக் குருவியொன்றின் 

கருணை நீ

வலியின் நினைவுகளை

வருடப் புதைத்திருக்கும்

அரூபத் தழும்பு நீ

பிரபஞ்சத்தின் ஆசைகளெல்லாம் 

விழுங்கிச் செரித்திருக்கும்

செயற்கை நீரூற்று ஒன்றில்

அசைந்து அமிழும்

தாமிர நாணயம் நீ 

நாட்குறிப்பேட்டில் 

தேதியிட்டுப் பதுக்கி வைக்க

கனவுத் தூண்டிலில்

சிக்கி முறிந்த மின்னல் நீ

துருவேறிப்போன 

ரயில் ஜன்னல் கம்பியின்

மழை வாசம் நீ

ஒரு குறுவாள் தீண்டலில்

உறையச் செய்திடும்

மெடூசாவின் கண்கள் நீ 

அவற்றின் 

ஆயிரம் முத்தங்கள் நீ

****

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

30 Monday Jul 2012

Posted by rejovasan in கவிதை

≈ 4 Comments

Tags

tamil kavithai, tamil poem

 

புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்

மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..

 

திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …

 

என்றோ கற்றுக்கொண்டுவிட்டிருக்கும்

கெட்ட வார்த்தைகள்

தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்

சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல

வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து

இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …

 

யாரையும் காயப்படுத்திவிடுவேனோ

என மௌனித்திருந்த

கடைசி இருபத்தினான்கு மணி நேரங்களின்

பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்

பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்

தன்னைத் தானே வதைத்துக் கொள்வது

படு முட்டாள்தனமான காரியமென

மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …

 

நான் காயப்படக்கூடும் என்ற

எவ்விதப் பிரக்ஞையுமின்றி

என்னைப் பற்றிய மதிப்பீடொன்று  

எய்யப்பட்டு விடும் முன்

எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு

பேசலாமென்ற சிந்தனையிலேயே

அர்த்தமற்ற வார்த்தைகளால்

நிரம்பிவிடுகின்றன  

எல்லா உரையாடல்களும் …

 

கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்

தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்

என் படுக்கை அறையின் ஜன்னல்கள்

களவாடப்பட்டிருக்கின்றன

எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன

எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்

எழுதப்படுகின்றன

குடைக்குள் வர மறுக்கின்றன

மழையும் மழை சார்ந்த எதுவும் …

 

கண்ணீரும் கவிதையும் இசையும்

தருவிக்கப்பட்ட புன்னகையும்

நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று

தெரிந்துபோன

இச்சபிக்கப்பட்ட தருணத்தில்

ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 156 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள்
  • ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்
  • அரூபனின் பிரார்த்தனைகள்
  • யௌவனத்தில் நடுங்கும் இரவு
  • சின்னஞ் சிறிய உலகம்

Top Posts

  • மறந்து போன முதல் கவிதை …

Create a website or blog at WordPress.com

Cancel

 
Loading Comments...
Comment
    ×
    %d bloggers like this: