ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்
21 Sunday Mar 2021
Posted Uncategorized
in21 Sunday Mar 2021
Posted Uncategorized
in30 Monday Jul 2012
Posted கவிதை
inTags
புகைக்கு நடுவே இருந்து ஒரு வன்மம்
மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது ..
திருப்பி அடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
விடாது மூளைக்குள் ஒரு சிலந்தியின் குரல் …
என்றோ கற்றுக்கொண்டுவிட்டிருக்கும்
கெட்ட வார்த்தைகள்
தொண்டைகுழி தாண்டி நாவிற்குள்
சற்று முன்பு தூண்டிலில் இருந்து பிரிக்கப்பட்ட மீன் போல
வெடுக்கென்று தெறித்து விழ தருணம் பார்த்து
இறந்தது போல நடித்துக் கொண்டிருகின்றன …
யாரையும் காயப்படுத்திவிடுவேனோ
என மௌனித்திருந்த
கடைசி இருபத்தினான்கு மணி நேரங்களின்
பேசப்படாத வார்த்தைகள் மொத்தமும்
பரிசீலனைக்கு அருகதை இல்லாதவர்களுக்காய்
தன்னைத் தானே வதைத்துக் கொள்வது
படு முட்டாள்தனமான காரியமென
மீண்டுமொருமுறை காட்டிவிட்டன …
நான் காயப்படக்கூடும் என்ற
எவ்விதப் பிரக்ஞையுமின்றி
என்னைப் பற்றிய மதிப்பீடொன்று
எய்யப்பட்டு விடும் முன்
எதிராளியை வீழ்த்த என்ன அவதூறு
பேசலாமென்ற சிந்தனையிலேயே
அர்த்தமற்ற வார்த்தைகளால்
நிரம்பிவிடுகின்றன
எல்லா உரையாடல்களும் …
கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்
எனது ஒவ்வொரு செயல்களுக்குமாய்
தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்
என் படுக்கை அறையின் ஜன்னல்கள்
களவாடப்பட்டிருக்கின்றன
எனது வார்த்தைகள் யார் யாராலோ தீர்மானிக்கப்படுகின்றன
எனது நாட்குறிப்புகள் எவனோ ஒருவனால்
எழுதப்படுகின்றன
குடைக்குள் வர மறுக்கின்றன
மழையும் மழை சார்ந்த எதுவும் …
கண்ணீரும் கவிதையும் இசையும்
தருவிக்கப்பட்ட புன்னகையும்
நிரந்தர ஆறுதல்கள் இல்லையென்று
தெரிந்துபோன
இச்சபிக்கப்பட்ட தருணத்தில்
ரௌத்திரம் பழகத் துவங்கியிருக்கிறேன்.