பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன்

Tag Archives: tamil Kavithaigal

வெண்ணிற இரவுகள் – ஜனவரி

31 Thursday Jan 2013

Posted by rejovasan in வெண்ணிற இரவுகள்

≈ 3 Comments

Tags

காதற் சிறப்புரைத்தல, Kathal Kavithaigal, kavithaigal, poems, tamil Kavithaigal

 

January

 

முடிவிலாப்  புன்னகை ஒன்றைத்

தந்து போகிறாய்

உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்

நினைவுகளில் நான் ….

————————————————————-

ஒரு கவிதை எழுதும் நேரத்தில்

எங்கே சென்றாய் …

————————————————————-

நீ பூமிவாசி

நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்

நீ மறையவும் நான் தேய்வதும்

நான் துரத்திட நீ ஓடவும்

சபிக்கப்பட்டிருக்கிறோம்

ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே

பயணித்திருக்க

அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில்  ….

 

—————————————————————

 

மின்னல்கள் படிக்கக்

கற்றுக் கொண்டிருக்கிறேன்

இனி நீ

மழைபேசியில்

குறுஞ்செய்திகள் அனுப்பு

 

——————————————————————-

 

தெருவிளக்கின் புன்னகையில்

இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது

மஞ்சள் பனி

உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …

 

———————————————————————

 

குடை மறந்த நீ

எச்சில் வடிக்கும் மேகம்

திட்டமிட்டே அணைக்கிறது

முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்

நீரை நனைக்க

எங்கே கற்றுக்கொண்டாய் …!

———————————————————————-

 

உனக்கென எழுதி வேண்டாமென்று

அடித்துப்போட்ட வார்த்தைகள்

எங்கெங்கு போயினும்

கடிக்க வருகின்றன

காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …

 

————————————————————————–

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Google+ (Opens in new window)

Like this:

Like Loading...

பிளாஸ்டிக் வார்த்தைகள்

02 Thursday Aug 2012

Posted by rejovasan in கவிதை

≈ 3 Comments

Tags

kavithaigal, poem, tamil Kavithaigal, tamil poem

 

பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்  

சேர்ந்து கொண்டே இருக்கின்றன

வார்த்தைகள்

கொடும் நஞ்சைப் போல ..

 

நானொன்றும் சர்ப்பம் அல்ல

இருப்பினும்

யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ

என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …

 

கண்ணாடி பார்த்துப் பேசியோ

கவிதைகள் மட்டும் எழுதியோ

தீர்க்க முடியாது வார்த்தைகளை

ஒருபோதும்  …

 

உமிழ்நீர் சுரப்பிகள் போல

உதிர்க்கவியலா

வார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..

 

அலைபேசியும்

இணையதள அரட்டைகளும்

கனவில் பேசும் வார்த்தைகள் …

எங்கேயோ மறந்து போய்

புதைத்துவிட்ட நினைவுகளின் வடுக்களை

அனிச்சையாய் வருடச் செய்கின்றன

கலைந்து போனதும் …

 

ஜன்னலுக்கு வெளியே மட்டும்

மாறும் பருவ காலங்கள்

அறைக்குள்ளே பெய்வ தென்னவோ

மௌனப் பனி மட்டும் …

 

வாரத்தின் நாட்களெல்லாம்

ஒரே போல் இருக்கையில்

எதற்காக

ஏழு வேறு பெயர்கள் .. 

 

வெகுநேரம் கழித்து

எதிர்படும் எவனிடமோ

பதில் வணக்கம் சொல்ல

முற்படுகையில்

நடுங்கிக் கொண்டே வார்த்தைகள்

வராமல் போக

செருமும் தொண்டைக்குள்

சுருண்டிருக்கிறது

தனித்திருப்பதன் பயம் ..

 

தனித்திருப்பதென்பது

சுதந்திரமல்ல

வெறுமனே தனித்திருப்பது

அவ்வளவே …

 

———————————————————-

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Google+ (Opens in new window)

Like this:

Like Loading...

தேடு

இதுவரை

Categories

என்னைப் பற்றி

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 112 other followers

Meta

  • Register
  • Log in
  • Entries RSS
  • Comments RSS
  • WordPress.com

முகநூல் பக்கம்

முகநூல் பக்கம்

சமீபத்திய இடுகைகள்

  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 15
  • இதுவும் …
  • வெண்ணிற இரவுகள் – ஜனவரி
  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 14
  • முகவரி தொலைத்த கடிதங்கள் # 13

Top Posts

  • எங்க ஊருக் கதையொன்னு …

Create a website or blog at WordPress.com

Cancel
%d bloggers like this: