Tags
பறவைகளின் ஆலாபனை
11 Tuesday Aug 2020
11 Tuesday Aug 2020
Tags
10 Monday Aug 2020
08 Saturday Aug 2020
Tags
04 Tuesday Apr 2017
Posted கவிதை
inநினைவில் இருக்கும்
அந்த ஒரே ஒரு முத்தத்தினை
இன்னமும் வருடிக்கொண்டிருக்கிறது மனது
புன்னகை தருகிறது
என் கன்னத்தில் உன் தடுகள்
முளைத்த அந்த இரவு
லேசான நெருப்பு விட்டு விட்டுத் துடித்து
நீ ஊதி உதடுகள் எடுத்ததும்
தேகம் மொத்தமும் பரவியது
நேற்று போலிருக்கிறது
கழுத்திலிருந்து எகிறி குதித்து
உன் உதடுகளோடே
ஒட்டிக் கொண்டோடிவிட
எவ்வளவு முயன்றதென் தலை தெரியுமா
உன் கண்கள் சந்திக்க முடிந்திருந்த
அந்த சிறு வினாடிகளில் இருந்தே
இறகு தொட்டெழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்
அந்த இரவினை மீண்டும் எதிர்பார்த்தே
இறங்க எத்தனிக்கிறேன் என் எல்லா
நாளைகளுக்குள்ளும்
உன் ஸ்பரிசத்தின் குளிர்ச்சி
இன்னமும் உறையவைத்திருக்கிறது
எனக்குள் என்னை
அடுத்தமுறை உன்னைச் சந்திக்கையில்
அதேபோல் இல்லாவிட்டாலும்
அதில் துளியாவது தொட்டுக் கொண்டு
உன் கன்னங்கள் நனைப்பேன்
புன்னகைப்பதை நிறுத்திவிட்டு
இப்பொழுது போய் உறங்கு
காத்திருக்கின்றன முத்தங்கள் சுமந்து கொண்டு
ஆயிரம் கனவுகள்.
***
31 Thursday Jan 2013
Posted வெண்ணிற இரவுகள்
in
முடிவிலாப் புன்னகை ஒன்றைத்
தந்து போகிறாய்
உன் முகம் பார்த்துக்கிடந்த நாட்களின்
நினைவுகளில் நான் ….
————————————————————-
ஒரு கவிதை எழுதும் நேரத்தில்
எங்கே சென்றாய் …
————————————————————-
நீ பூமிவாசி
நான் நிலாவுக்குச் சொந்தக்காரன்
நீ மறையவும் நான் தேய்வதும்
நான் துரத்திட நீ ஓடவும்
சபிக்கப்பட்டிருக்கிறோம்
ஒரே பால்வீதியில் பார்த்துக்கொண்டே
பயணித்திருக்க
அவரவருக்கான நீள்வட்டப் பாதைகளில் ….
—————————————————————
மின்னல்கள் படிக்கக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்
இனி நீ
மழைபேசியில்
குறுஞ்செய்திகள் அனுப்பு
——————————————————————-
தெருவிளக்கின் புன்னகையில்
இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கிறது
மஞ்சள் பனி
உன் ஸ்பரிசங்களை நகலெடுத்துக் கொண்டு …
———————————————————————
குடை மறந்த நீ
எச்சில் வடிக்கும் மேகம்
திட்டமிட்டே அணைக்கிறது
முத்தமிட்ட எச்சில் கறை தெருவெங்கும்
நீரை நனைக்க
எங்கே கற்றுக்கொண்டாய் …!
———————————————————————-
உனக்கென எழுதி வேண்டாமென்று
அடித்துப்போட்ட வார்த்தைகள்
எங்கெங்கு போயினும்
கடிக்க வருகின்றன
காலைச் சுற்றிய பாம்புக் குட்டிகளாய் …
————————————————————————–