நினைவில் வாழும் மீன்கள்
10 Monday Aug 2020
10 Monday Aug 2020
09 Sunday Aug 2020
Tags
08 Saturday Aug 2020
Tags
04 Tuesday Apr 2017
Posted கவிதை
inநினைவில் இருக்கும்
அந்த ஒரே ஒரு முத்தத்தினை
இன்னமும் வருடிக்கொண்டிருக்கிறது மனது
புன்னகை தருகிறது
என் கன்னத்தில் உன் தடுகள்
முளைத்த அந்த இரவு
லேசான நெருப்பு விட்டு விட்டுத் துடித்து
நீ ஊதி உதடுகள் எடுத்ததும்
தேகம் மொத்தமும் பரவியது
நேற்று போலிருக்கிறது
கழுத்திலிருந்து எகிறி குதித்து
உன் உதடுகளோடே
ஒட்டிக் கொண்டோடிவிட
எவ்வளவு முயன்றதென் தலை தெரியுமா
உன் கண்கள் சந்திக்க முடிந்திருந்த
அந்த சிறு வினாடிகளில் இருந்தே
இறகு தொட்டெழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்
அந்த இரவினை மீண்டும் எதிர்பார்த்தே
இறங்க எத்தனிக்கிறேன் என் எல்லா
நாளைகளுக்குள்ளும்
உன் ஸ்பரிசத்தின் குளிர்ச்சி
இன்னமும் உறையவைத்திருக்கிறது
எனக்குள் என்னை
அடுத்தமுறை உன்னைச் சந்திக்கையில்
அதேபோல் இல்லாவிட்டாலும்
அதில் துளியாவது தொட்டுக் கொண்டு
உன் கன்னங்கள் நனைப்பேன்
புன்னகைப்பதை நிறுத்திவிட்டு
இப்பொழுது போய் உறங்கு
காத்திருக்கின்றன முத்தங்கள் சுமந்து கொண்டு
ஆயிரம் கனவுகள்.
***
02 Thursday Aug 2012
Posted கவிதை
in
பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்
சேர்ந்து கொண்டே இருக்கின்றன
வார்த்தைகள்
கொடும் நஞ்சைப் போல ..
நானொன்றும் சர்ப்பம் அல்ல
இருப்பினும்
யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ
என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …
கண்ணாடி பார்த்துப் பேசியோ
கவிதைகள் மட்டும் எழுதியோ
தீர்க்க முடியாது வார்த்தைகளை
ஒருபோதும் …
உமிழ்நீர் சுரப்பிகள் போல
உதிர்க்கவியலா
வார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..
அலைபேசியும்
இணையதள அரட்டைகளும்
கனவில் பேசும் வார்த்தைகள் …
எங்கேயோ மறந்து போய்
புதைத்துவிட்ட நினைவுகளின் வடுக்களை
அனிச்சையாய் வருடச் செய்கின்றன
கலைந்து போனதும் …
ஜன்னலுக்கு வெளியே மட்டும்
மாறும் பருவ காலங்கள்
அறைக்குள்ளே பெய்வ தென்னவோ
மௌனப் பனி மட்டும் …
வாரத்தின் நாட்களெல்லாம்
ஒரே போல் இருக்கையில்
எதற்காக
ஏழு வேறு பெயர்கள் ..
வெகுநேரம் கழித்து
எதிர்படும் எவனிடமோ
பதில் வணக்கம் சொல்ல
முற்படுகையில்
நடுங்கிக் கொண்டே வார்த்தைகள்
வராமல் போக
செருமும் தொண்டைக்குள்
சுருண்டிருக்கிறது
தனித்திருப்பதன் பயம் ..
தனித்திருப்பதென்பது
சுதந்திரமல்ல
வெறுமனே தனித்திருப்பது
அவ்வளவே …
———————————————————-