Tags
இன்னும் ஓர் வருடம் .. கல்லூரி நாட்கள் முடிந்து போய் ..
பார்க்கையில் சில பிரிவுகள் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது . சென்ற வருடம் போன்ற , உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில் எதையும் எழுதத் தோன்றவில்லை. இது ஒரு மறக்க முடியாத நாள் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை .
மனமும் , உடலும் கொஞ்சமேனும் மாறி இருக்கின்றன. பார்க்கும் பார்வைகளும் , அவைகள் குறித்தான அவதானிப்புகளும் வேறு விதமாகியிருக்கின்றன. தினம் பேருந்தோ ஏதோ ஒன்று ஏறி அலுவலகம் செல்லும் கட்டாயங்களாலும் , கண் எதிர் படும் உணவகங்களில் பசியாறும் பழக்கங்களாலும் , எனக்காக வாழ்ந்த நாட்கள் ice age காலத்திய மாமூத் யானையின் தந்தங்களாய் மனதின் கீழ் அடுக்குகளில் உறைந்து கொண்டிருக்கிறது .
எல்லாவற்றையும் ஓரளவாவது நிதனாமாகப் பார்க்கப் பழக்கமாகியிருக்கிறது .கல்லூரி நாட்களில் இருந்தது போல் அதிக சந்தோசம் , துக்கம் இரண்டுமே அவ்வளவாக இல்லை . சொல்லப் போனால் கடைசியாக கண்ணீர் பார்த்ததெப்பொழுது என நினைவில்லை. ரௌத்திரமும் திமிரும் மட்டும் அப்படியே இருக்கிறது .எனக்கு இரண்டுமே வாழ்வைச் செலுத்தும் ஆதாரங்கள் போல .
பெண்கள் குறித்தான ஈர்ப்பும், குறுகுறுப்பும் , ஆர்வமும் வெகுவாக மாறியிருக்கிறது . தேவதைகள், பூக்கள் எல்லாம் தொலைந்து போய் , share auto வில் வியர்த்துக்கொண்டு கூட வரும் சக பயணியாகப் பார்க்கப் பழக்கமாகியிருக்கிறது.
கைபேசியுடனான உறவு குறைந்திருக்கிறது . சில நண்பர்கள் அழைத்தால் ஓரிரு நிமிடங்கள் தாண்டி பேச எதுவுமில்லாமல் மௌனங்களால் நிரப்ப வேண்டியிருக்கிறது .அழைப்பைத் துண்டித்ததும் , விஷயமே இல்லாமல் பேசிக் களித்த இரவுகள் நினைவில் வந்து போகின்றன.
சமீபத்தில் கல்லூரி சென்று வந்தபொழுது உணர்ந்தது இவைகளைத் தான் .
இது என் கல்லூரி அல்ல . கல்லூரி என்பது வெறும் கட்டிடங்களாலும் மரங்களாலும் மட்டும் ஆனது அல்ல. அது உணர்வுகளால் நிரம்பியது.நம்முடன் படித்த உறவுகளால் நிரம்பியது . நண்பர்களோடு களித்து மகிழ்ந்திருந்த அதே நாட்கள் என்றைக்கும் மீண்டும் கட்டமைக்க முடியாத ஒன்று .அந்த நாட்களில் பார்த்த ஓடாத ஒரு படம் கூட காலக் குறியீடாக நின்று போயிருக்கிறது. மீண்டும் ஏதோ ஒரு பேருந்துப் பயணத்திலோ இல்லை விடுமுறைக் கொண்டாட்டத்திலோ பார்க்கையில் ,மனதில் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வுகளும் கூட இந்த கட்டிடங்கள் மட்டுமே நிறைந்த பூமி ஏற்படுத்த முடியாது .
இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .
😦 ;-( nalla iruku.innoru year mudinchu pochu.aana innum colleage la irukarama3ye iruntha nalla irukum nra aasai enaku konja kooda koraiyala.esp intha part rompa nalla irukku.
இது என் கல்லூரி அல்ல . கல்லூரி என்பது வெறும் கட்டிடங்களாலும் மரங்களாலும் மட்டும் ஆனது அல்ல. அது உணர்வுகளால் நிரம்பியது.நம்முடன் படித்த உறவுகளால் நிரம்பியது . நண்பர்களோடு கழித்து மகிழ்ந்திருந்த அதே நாட்கள் என்றைக்கும் மீண்டும் கட்டமைக்க முடியாத ஒன்று .அந்த நாட்களில் பார்த்த ஓடாத ஒரு படம் கூட காலக் குறியீடாக நின்று போயிருக்கிறது. மனதில் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வுகளும் கூட இந்த கட்டிடங்கள் மட்டுமே நிறைந்த பூமி ஏற்படுத்த முடியாது .
LikeLike
very true ;( ;(
//இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .//
indha varigala padithavudan edho oru inam puriyadha kavalai..;(
LikeLike
//தேவதைகள், பூக்கள் எல்லாம் தொலைந்து போய் , share auto வில் வியர்த்துக்கொண்டு கூட வரும் சக பயணியாகப் பார்க்கப் பழக்கமாகியிருக்கிறது.
//
அப்போதும் அவர்கள் தேவதைகளே! தேவதைக்கான இலக்கணம் மட்டும் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது இப்போது.
//இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .//
இது சத்தியம்! இப்பொழுதெல்லாம் நான் எளிதாக அழுதுவிடுகிறேன் அல்லது என்னை அழவைக்கும் ஏதோவொன்று இப்பொழுது அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது. இந்த வரிகளும் அவற்றுள் ஒன்று.
LikeLike
@ sathya ,
// பார்க்கையில் சில பிரிவுகள் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது //
LikeLike
@ yoga ,
😦
LikeLike
@ Seral,
அண்ணா ,
சிலரது விமர்சனங்களுக்காக நான் மிகவும் காத்திருப்பதுண்டு . உங்களுடையதும் ஒன்று .தாங்கள் சமீபமாகத் தந்திருக்கும் விமர்சனங்கள் மிகவும் நெகிழச் செய்கின்றன.
LikeLike
//அப்போதும் அவர்கள் தேவதைகளே! தேவதைக்கான இலக்கணம் மட்டும் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது இப்போது.//
என்ன சொன்னாலும் , தேவதைக் கனவுகளும் , தேவதைக்கான கனவொன்றும் வரத் தவறுவதேயில்லை 😉
LikeLike
🙂 😦
//
இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம்
//
🙂 😦
எடுத்துவந்ததை தொலைத்துவிட்டதாய் உணர்வெழுகிறது..
என்னதான் உணர்வுக்குவியல்களாய் இருந்தாலும் நினைவில் நிலைக்க, அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள சில அடையாளங்கள் எப்போதும் தேவைப்படுகின்றன.
LikeLike
நாமே நமக்கான அடையாளங்களை இழந்து தொலைந்து கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது எனக்கு ..
LikeLike
Nalla irukku!
Marubadiyum varaathu enbathalo ennavo ‘kaloori naatkal’in suvai naalukku naal koodi kondae pogirathu.
Ethirkaalathil suvai mikka ennagalai tharuvatharkkathaan intha nigal kaalamo endra ennamum enullae ezhukirathu!
LikeLike
ஒரு வகையில் அதுவும் சரி தான் ராஜ் ..
LikeLike
//இப்பொழுதிருக்கும் கல்லூரி வேறொரு கல்லூரி . நாங்கள் வாழ்ந்திருந்த கல்லூரியை , நாங்கள் கிளம்பும் போதே , அனைவரின் பூட்டிய பைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடனேயே எடுத்து வந்துவிட்டோம் .//
நல்ல வரிகள்…சுருக்கமா எழுதி முடிச்சிட்டியேப்பா!
( நான் மே- 16 அன்று அறையைக் காலி செய்தேன்)
LikeLike
நன்றி அண்ணா 🙂 கோடையும் மே மாதப் பிரிவும் நம் கல்லூரியின் நினைவுப் பரிசுகள் போல ..
LikeLike
நிச்சியமாக கல்லூரிகள்
கட்டிடகளால் கட்டப்படவில்லை
பலரது மனகளால்
கட்டபட்டுத்தான் இருக்கின்றன..
LikeLike