நினைவில் வாழும் மீன்கள் 10 Monday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsதமிழ் கவிதைகள், poems, tamil Kavithaigal, tamil poem எப்படி இருந்தது உன் குரல் அந்த மழையும் அமர்ந்திருந்த மரமும் அழகாய் இருந்த நீயும் மட்டுமே நினைவிருக்கிறது என்ன பேசிக் கொண்டிருந்தோம் பேசிக் கொண்டிருந்தோம் அது நினைவிருக்கிறது ஈர நெற்றியும் நடுங்கிய உதடுகளும் அடர்ந்த கண்களும் குளிர்ந்த சுவாசமும் கைவிரல் மோதிரமும் அதன் கீறலொன்றும் நினைவிருக்கிறது வாசனை நினைவிருக்கிறது அல்லது அப்படி நம்பிக் கொண்டிருக்கிறேன் வாசனை திரவியத்தின் பெயரை இன்னொருமுறை கேட்டிருக்கலாமோ உனது கையெழுத்து மட்டுமே எஞ்சிவிட்டிருக்கிறது உள்ளங்கைச்சூட்டைத் தொலைத்துவிட்டிருக்கிறோம் இருவரும் எனது மூளைத் தரவுகளைத் திருடிவிட்டிருக்கும் செயலி ஒன்று இவளைத் தெரியுமா என உன் சமீபத்திய புகைப்படத்தை நீட்டிக் கேட்கிறது புகைப்படத்தில் இருக்கும் நீ வேறு யாரோ போல் இருக்கிறாய் உனது கண்கள் நான் பழக்கிய மீன்குட்டிகள் அல்ல இந்தப் புன்னகை உன் உதடுகளுக்கு ஒட்டவேயில்லை உனது புத்தக விருப்பப் பட்டியலையும் பிடித்த இசைத் தொகுப்புகளையும் பார்த்து இவள் வேறு யாரோ என அலறி செயலியைத் துண்டிக்கிறேன் இனி ஒருபோதும் இந்த உன்னைச் சந்திக்க விருப்பமில்லை என் நினைவில் இருக்கும் நீயே நீயாக இருந்துவிட்டுப் போ *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading... Related